அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஞானசேகரன் குற்றவாளி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பின்னர் அந்த குற்றப்பத்திரிக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். வழக்கில், 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மே 28 ம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஜூன் 2 ம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அற்வித்திருந்தார்.
ஆயுள் தண்டனை
அதன்படி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். இதற்காக புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் ஒன்பது பிரிவுகளில், ஒரு மாதம் முதல் 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்த நீதிபதி, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் எந்த தண்டனையும் அறிவிக்கவில்லை. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும்.அதேபோல பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
வேறு யாருக்கும் தொடர்பு இல்லை
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ராஜலட்சுமி, உரிய விசாரணைக்கு பிறகு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு, அதற்காக இந்த தீர்ப்பு நகலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “இந்த வழக்கில் சாட்சிகள் முக்கிய ஆதாரமாக இருந்தது. இந்த வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என விசாரணையிலும் தெரிந்ததுள்ளது.
சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது
இன்னொரு நபர் இருக்கிறார் என்பது போல ஞானசேகரன் ஏமாற்றி உள்ளார். இந்த வழக்கில் மேல்முறையீடு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஞானசேகரனின் செல்போன் தான் இந்த வழக்கில் ஆதாரமாக இருந்தது. மேலும் வழக்கில் பிறழ் சாட்சி யாரும் இல்லை. அபராதம் விதிக்கப்பட்ட தொகை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
முக்கியத்துவம் வாழ்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை 30 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும்.இந்த காலத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது. இந்த வழக்கில் புலன் விசாரணை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 11 குற்றச்சாட்டுகளுக்கும் அரசு தரப்பில் வாய்மொழியாகவும் ஆவணப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் சம்மரிக்கப்பட்டது.
ஒருவர் தான் குற்றவாளி
ஆதாரங்கள் திருப்திகரமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்றால் அது ஞானசேகரன் பயன்படுத்திய செல்போன் தான்.அவர் சமூக வலைத்தளங்களில் எதையெல்லாம் பயன்படுத்தினார் உள்ளிட்டவைகள் அதிலிருந்து அதை நாங்கள் சோதனை செய்ய அனுப்பினோம். சம்பவ தினத்தன்று அந்த செல்போனின் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்தோம்.
அப்பொழுது அந்த செல்போனை ஏரோப்ளேன் மோடில் போடப்பட்டுள்ளது என்று அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ நேரத்தன்று ஏரோபிளேன் மோடில் அந்த செல்போன் போடப்பட்டது என்று ஆவணபூர்வமாக அந்த நிபுணர் வாய்மொழியாக வந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும்.அண்ணா பல்கலைக்கழகம் வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி. ஆதாரப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அரசு தரப்பில் வாதிட்டு நிரூபித்துள்ளோம். நீதிமன்றம் அறிவித்துள்ள அபராதத்தை அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லியுள்ளார்” என தெரிவித்தார்.
ஞானசேகரன் குற்றவாளி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பின்னர் அந்த குற்றப்பத்திரிக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். வழக்கில், 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மே 28 ம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஜூன் 2 ம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அற்வித்திருந்தார்.
ஆயுள் தண்டனை
அதன்படி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். இதற்காக புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் ஒன்பது பிரிவுகளில், ஒரு மாதம் முதல் 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்த நீதிபதி, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் எந்த தண்டனையும் அறிவிக்கவில்லை. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும்.அதேபோல பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
வேறு யாருக்கும் தொடர்பு இல்லை
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ராஜலட்சுமி, உரிய விசாரணைக்கு பிறகு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு, அதற்காக இந்த தீர்ப்பு நகலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “இந்த வழக்கில் சாட்சிகள் முக்கிய ஆதாரமாக இருந்தது. இந்த வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என விசாரணையிலும் தெரிந்ததுள்ளது.
சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது
இன்னொரு நபர் இருக்கிறார் என்பது போல ஞானசேகரன் ஏமாற்றி உள்ளார். இந்த வழக்கில் மேல்முறையீடு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஞானசேகரனின் செல்போன் தான் இந்த வழக்கில் ஆதாரமாக இருந்தது. மேலும் வழக்கில் பிறழ் சாட்சி யாரும் இல்லை. அபராதம் விதிக்கப்பட்ட தொகை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
முக்கியத்துவம் வாழ்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை 30 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும்.இந்த காலத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது. இந்த வழக்கில் புலன் விசாரணை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 11 குற்றச்சாட்டுகளுக்கும் அரசு தரப்பில் வாய்மொழியாகவும் ஆவணப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் சம்மரிக்கப்பட்டது.
ஒருவர் தான் குற்றவாளி
ஆதாரங்கள் திருப்திகரமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்றால் அது ஞானசேகரன் பயன்படுத்திய செல்போன் தான்.அவர் சமூக வலைத்தளங்களில் எதையெல்லாம் பயன்படுத்தினார் உள்ளிட்டவைகள் அதிலிருந்து அதை நாங்கள் சோதனை செய்ய அனுப்பினோம். சம்பவ தினத்தன்று அந்த செல்போனின் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்தோம்.
அப்பொழுது அந்த செல்போனை ஏரோப்ளேன் மோடில் போடப்பட்டுள்ளது என்று அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ நேரத்தன்று ஏரோபிளேன் மோடில் அந்த செல்போன் போடப்பட்டது என்று ஆவணபூர்வமாக அந்த நிபுணர் வாய்மொழியாக வந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும்.அண்ணா பல்கலைக்கழகம் வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி. ஆதாரப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அரசு தரப்பில் வாதிட்டு நிரூபித்துள்ளோம். நீதிமன்றம் அறிவித்துள்ள அபராதத்தை அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லியுள்ளார்” என தெரிவித்தார்.