மதுரை மாநகராட்சி தெப்பக்குளம் அருகே புது ராம்நாட் சாலை பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிட பணிக்காக போர்வெல் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக போர்வெல் மூலமாக எடுக்கப்பட்டு தண்ணீரானது வித்தியாசமாக வந்துள்ளது.
கடுமையான துர்நாற்றத்துடன் பெட்ரோல் நிறத்தில் தண்ணீர் வருவதால், நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்து வருகிறதா என குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, சோதனைக்காக அந்த நீரினை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர் குடியிருப்பு வாசிகள். ஆய்வக முடிவில், கட்டிடப் பணிகளுக்கு கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு நீரின் தன்மை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுக்குறித்து பேசிய குடியிருப்பு வாசிகள், ”தாங்கள் பல லட்சம் செலவழித்து கட்டிட பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் ஏற்கெனவே போடப்பட்ட போர்களில் தண்ணீர் பெட்ரோல் போல வந்ததால், மீண்டும் புதிய போர் போட்டோம். ஆனால், அதிலும் தண்ணீர் பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் கலந்து வருவதால் கட்டிடப் பணிகளை பாதியிலேயே நிறுத்தி உள்ளோம். சாயப்பட்டறைகள் இப்பகுதியில் அதிகம் செயல்பட்டு வருவதால் அதிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் நிலத்தடி நீரில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாக” தெரிவித்துள்ளனர்.
கட்டிட பணிகளை கூட தொடர முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் நிலத்தடி நீரானது பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் போன்று வரத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் தொன்மையான அடையாளமான தெப்பக்குளத்தின் அருகில் நிலத்தடி நீர் ரசாயனம் கலந்து பெட்ரோல் நிறத்தில் வெளியேறுவதால் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
இதுத்தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடுமையான துர்நாற்றத்துடன் பெட்ரோல் நிறத்தில் தண்ணீர் வருவதால், நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்து வருகிறதா என குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, சோதனைக்காக அந்த நீரினை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர் குடியிருப்பு வாசிகள். ஆய்வக முடிவில், கட்டிடப் பணிகளுக்கு கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு நீரின் தன்மை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுக்குறித்து பேசிய குடியிருப்பு வாசிகள், ”தாங்கள் பல லட்சம் செலவழித்து கட்டிட பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் ஏற்கெனவே போடப்பட்ட போர்களில் தண்ணீர் பெட்ரோல் போல வந்ததால், மீண்டும் புதிய போர் போட்டோம். ஆனால், அதிலும் தண்ணீர் பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் கலந்து வருவதால் கட்டிடப் பணிகளை பாதியிலேயே நிறுத்தி உள்ளோம். சாயப்பட்டறைகள் இப்பகுதியில் அதிகம் செயல்பட்டு வருவதால் அதிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் நிலத்தடி நீரில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாக” தெரிவித்துள்ளனர்.
கட்டிட பணிகளை கூட தொடர முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் நிலத்தடி நீரானது பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் போன்று வரத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் தொன்மையான அடையாளமான தெப்பக்குளத்தின் அருகில் நிலத்தடி நீர் ரசாயனம் கலந்து பெட்ரோல் நிறத்தில் வெளியேறுவதால் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
இதுத்தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.