கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.