K U M U D A M   N E W S

சென்னை

வேலை வாங்கி தருவதாக கூறி 1.65 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்தவர் கைது!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி....மேயர் கொடுத்த அப்டேட்

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என சென்னை மேயர் பிரியா விளக்கம்

தீர்ப்பு ஒகே.. யார் அந்த சாருக்கு பதில் எங்கே? EPS சூளுரை

”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வயதான தாய்.. பெண் குழந்தை.. நீதிபதியிடம் மன்றாடிய குற்றவாளி ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி வழங்கபடும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.

FIR லீக்.. திமுக முகம்.. அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு.. நாக்பூரில் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை..!

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செம்மரக்கட்டைகளை கடத்தும் முக்கிய நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் டீக்கடையில் ரகளை.. 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது!

மதுபோதையில் டீக்கடையில் புகுந்து மூன்று பேரை அடித்து ரகளையில் ஈடுபட்ட 5 சிறார்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தவெக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல்.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை - 3 பேர் கைது!

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சொத்து பிரச்னையில் சகோதரரை வெட்டிய இளைஞர்…ரத்த காயத்துடன் கதறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி

வடபழனி போலீசார் தப்பி ஓடிய எபனேசரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று: பணிகளை மேற்கொள்ள அனுமதி!

தமிழகத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று பெற ரூ.18 கோடிக்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு - மே.28-ல் தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளிக்கிறார்.

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பொருட்கள் – சுங்கத்துறை விசாரணை

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில், கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் இருந்து, ரூ.1.3 கோடி மதிப்புடைய, தங்கம், தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகள் ஆகியவற்றை, சுங்கத்துறை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நடிகை கிரண்!

பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் பணியிடமாற்றம் - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சி: சவரனுக்கு ரூ.280 குறைவு!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையாகிறது; ஒரு கிராம் தங்கம் ரூ.8940க்கு விற்பனையாகிறது.

ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ – மணிப்பூர் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது!

தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் அவதி!

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

நெருங்கியது தென்மேற்கு பருவமழை- வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Gold Rate Today: மீண்டும் ஏறிய தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் (இன்று ) ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

IPL2025:10-வது தோல்வியை சந்தித்த CSK புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.. RR ஆறுதல் வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.