சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். புகாரளிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகும் நிலையில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு:
கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஞானசேகரன் என்ற நபர் அவர்களை மிரட்டி, மாணவரை விரட்டிவிட்டு, மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 அன்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார்.
யார் அந்த சார்?- லீக் ஆன FIR
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்ட நிலையில், அதன் முதல் தகவல் அறிக்கை (FIR) இணையத்தில் கசிந்தது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருந்த போதே, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் விவரங்கள் சில ஊடகங்களில் வெளியானது. அதில் மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களும் இடம்பெற்றிருந்தன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்கிற சட்டம் இருக்கும்போது, இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது.
அதற்கு முக்கிய காரணம், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தமிழகத்தை ஆளும் திமுக ஆதரவாளர் என்பது தான். மேலும், ’பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது, ஞானசேகரன் வேறு ஒருவரிடம் போனில் பேசியதாகவும், அவரை சார் என்று அழைத்ததாகவும்’ பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளதாக தகவல் பரவியது. யார் அந்த சார்? அவரை காப்பாற்ற தான் முதல் தகவல் அறிக்கை வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டதா? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்த எஃப்.ஐ.ஆர் கசிவானது தொழில்நுட்பக் கோளாறு (technical glitch) காரணமாக நடந்திருக்கலாம் என்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) இருந்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்திற்கு இணையத்தில் மாறும் தருணத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று தேசிய தகவல் மையம் (NIC) விளக்கமளித்தது.
29 பேர் சாட்சி: 100 பக்க குற்றப்பத்திரிக்கை
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நடைப்பெற்றது. விசாரணையின்போது, ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆட்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பதும், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் மீது 100 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஞானசேகரன் ஒருவர் மட்டுமே இந்த வழக்கில் தொடர்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர், 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாரதியநியாயசன்ஹிதா:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் மீது இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிதாக அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita - BNS) பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
--->BNS பிரிவு 63(a) - பாலியல் வன்கொடுமை (Rape)
--->BNS பிரிவு 64(1) - பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை (Punishment for Rape)
--->BNS பிரிவு 75(i)(ii) மற்றும் 75(i)(iii) - பாலியல் தொல்லை (Sexual Harassment)
மேலும், இந்த வன்கொடுமையை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டம் (Information Technology Act) பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது:
--->ஐ.டி சட்டம் பிரிவு 67 - ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது கடத்துதல் (Publishing or transmitting obscene material in electronic form)
--->ஐ.டி சட்டம் பிரிவு 67A - பாலியல் தொடர்பான விஷயங்களை வெளியிடுதல் அல்லது கடத்துதல் (Publishing or transmitting sexually explicit material in electronic form)
கூடுதல்வழக்குகள்:
ஏற்கெனவே மேலே குறிப்பிட்டது போல், திருட்டு, ஆட்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்றவற்றிலும் ஞானசேகரன் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தமாக 35 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்றுவெளியாகும்தீர்ப்பு:
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆளும் திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியையும் கொடுத்தது.கடந்த வாரம் வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்தனர். காவல்துறை தரப்பில் அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று மே-28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி காலை 10:30 மணியளவில் தீர்ப்பு அளிக்கவுள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு:
கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஞானசேகரன் என்ற நபர் அவர்களை மிரட்டி, மாணவரை விரட்டிவிட்டு, மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 அன்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார்.
யார் அந்த சார்?- லீக் ஆன FIR
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்ட நிலையில், அதன் முதல் தகவல் அறிக்கை (FIR) இணையத்தில் கசிந்தது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருந்த போதே, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் விவரங்கள் சில ஊடகங்களில் வெளியானது. அதில் மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களும் இடம்பெற்றிருந்தன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்கிற சட்டம் இருக்கும்போது, இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது.
அதற்கு முக்கிய காரணம், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தமிழகத்தை ஆளும் திமுக ஆதரவாளர் என்பது தான். மேலும், ’பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது, ஞானசேகரன் வேறு ஒருவரிடம் போனில் பேசியதாகவும், அவரை சார் என்று அழைத்ததாகவும்’ பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளதாக தகவல் பரவியது. யார் அந்த சார்? அவரை காப்பாற்ற தான் முதல் தகவல் அறிக்கை வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டதா? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்த எஃப்.ஐ.ஆர் கசிவானது தொழில்நுட்பக் கோளாறு (technical glitch) காரணமாக நடந்திருக்கலாம் என்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) இருந்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்திற்கு இணையத்தில் மாறும் தருணத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று தேசிய தகவல் மையம் (NIC) விளக்கமளித்தது.
29 பேர் சாட்சி: 100 பக்க குற்றப்பத்திரிக்கை
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நடைப்பெற்றது. விசாரணையின்போது, ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆட்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பதும், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் மீது 100 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஞானசேகரன் ஒருவர் மட்டுமே இந்த வழக்கில் தொடர்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர், 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாரதியநியாயசன்ஹிதா:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் மீது இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிதாக அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita - BNS) பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
--->BNS பிரிவு 63(a) - பாலியல் வன்கொடுமை (Rape)
--->BNS பிரிவு 64(1) - பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை (Punishment for Rape)
--->BNS பிரிவு 75(i)(ii) மற்றும் 75(i)(iii) - பாலியல் தொல்லை (Sexual Harassment)
மேலும், இந்த வன்கொடுமையை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டம் (Information Technology Act) பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது:
--->ஐ.டி சட்டம் பிரிவு 67 - ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது கடத்துதல் (Publishing or transmitting obscene material in electronic form)
--->ஐ.டி சட்டம் பிரிவு 67A - பாலியல் தொடர்பான விஷயங்களை வெளியிடுதல் அல்லது கடத்துதல் (Publishing or transmitting sexually explicit material in electronic form)
கூடுதல்வழக்குகள்:
ஏற்கெனவே மேலே குறிப்பிட்டது போல், திருட்டு, ஆட்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்றவற்றிலும் ஞானசேகரன் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தமாக 35 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்றுவெளியாகும்தீர்ப்பு:
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆளும் திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியையும் கொடுத்தது.கடந்த வாரம் வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்தனர். காவல்துறை தரப்பில் அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று மே-28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி காலை 10:30 மணியளவில் தீர்ப்பு அளிக்கவுள்ளார்.