சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்தார். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் IPS அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தண்டனை விபரங்கள் ஜுன் 2 ஆம் தேதி வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் அறிவித்தார். அதன்படி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று வெளியாகி உள்ளது.
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி தீர்ப்பளித்துள்ளார். மேலும் 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் 11 பிரிவுகளுக்கும் தனித்தனியாக தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது
30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் குற்றவாளி ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது என மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் எந்த தண்டனை குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை குற்றவாளி ஞானசேகரன் சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளார். முன்னதாக வழக்கு விசாரணையின் போது, ஞானசேகரன், “என் அப்பா இறந்துவிட்டார். நிறைய கடன் உள்ளது, அம்மவையும், சகோதரியையும், மகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்தார். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் IPS அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தண்டனை விபரங்கள் ஜுன் 2 ஆம் தேதி வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் அறிவித்தார். அதன்படி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று வெளியாகி உள்ளது.
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி தீர்ப்பளித்துள்ளார். மேலும் 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் 11 பிரிவுகளுக்கும் தனித்தனியாக தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது
30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் குற்றவாளி ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது என மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் எந்த தண்டனை குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை குற்றவாளி ஞானசேகரன் சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளார். முன்னதாக வழக்கு விசாரணையின் போது, ஞானசேகரன், “என் அப்பா இறந்துவிட்டார். நிறைய கடன் உள்ளது, அம்மவையும், சகோதரியையும், மகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.