தமிழ்நாடு

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி....மேயர் கொடுத்த அப்டேட்

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என சென்னை மேயர் பிரியா விளக்கம்

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி....மேயர் கொடுத்த அப்டேட்
சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி குறித்து மேயர் பிரியா விளக்கம்
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி உறுப்பினர்கள் தங்கள் வார்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு மேயர் பிரியா விளக்கம் அளித்தார்.

ரோப் கார் வசதி

கேள்வி நேரத்தில் பேசிய 104 வார்டு திமுக கவுன்சிலர் செம்ழொழி, சென்னையின் புகழ்பெற்ற மெரினாவில் ரோப் கார் வசதி வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என சென்னை மேயர் பிரியா கூறினார்.

குறிப்பாக உலகின் 2-வது நீளமான (13 கி.மீ.) கடற்கரை என்ற பெருமைக்குரியது சென்னை மெரினா. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது.

வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

அணிவகுத்து நிற்கும் தலைவர்களின் சிலைகள், வகை வகையான சிற்றுண்டியகங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள் உள்ளன. இங்கு பொதுமக்களை கவரும் விதமாக மெரினாவில் ரோப் கார் சேவை தொடங்க சென்னை மாநகராட்சி சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது. இதனை அடுத்து கட்ட பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.