K U M U D A M   N E W S

வழக்கு

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு : சத்தீஸ்கரில் முக்கிய குற்றவாளி கைது!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து தீவிரவாத தடுப்புப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

"நிகிதா மீது ஏன் நடவடிக்கை இல்லை"- சீமான் கேள்வி

நிகிதா மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வெளி வருகிறது. திரும்பத் திரும்ப ஏமாற்றி உள்ளார். ஏன் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

கணவருடன் சண்டை.. வீட்டிலிருந்து வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கு: சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது!

இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வழக்கு – அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கு: திமுக MP ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.