K U M U D A M   N E W S

இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டன்.. கழட்டிவிடப்பட்ட முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் அணியினை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஸாவின் குழந்தைகள் கூட எதிரிகள்தான் - இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் பணியிடமாற்றம் - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

ED விசாரணைக்கு தடை- டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன்... ‘பராசக்தி’ படத்திற்கு சிக்கலா?

இன்று ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple

கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple

7 மடங்கு அதிகரித்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள்.. லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அதிமுகவைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்தபோது ஏழு மடங்கு சொத்து சம்பாதித்ததாகவும், 2016ஆம் ஆண்டு 2 கோடி சொத்து இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு14 கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்.. உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!

நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

மண்ணின் கீழ் மறைந்துள்ள வரலாறு.. ஆவணப்படுத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!

தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

என் அன்பு செல்வங்கள் இனி இதுபோன்று செய்ய மாட்டார்கள் - நடிகர் சூரி

ஒரு படத்தை கொண்டாட எவ்வளவோ விதம் உள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டம் தேவையில்லை என்று என் அன்பு செல்லங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் என மதுரையில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

ஏழு மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்.. செந்தில்பாலாஜிக்கு ப்ரமோஷன் ? அறிவாலயம் அதிரடி!

தி.மு.க.வை நான்கு திசைகளிலும் இருந்து ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில் அதை சமாளிக்க ஏழு பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின், தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து ஏழு பேரின் கைகளில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே தொண்டர்களின் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... தீர்ப்பை பட்டாசு வெடித்து திமுகவினர் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை வால்பாறை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.