K U M U D A M   N E W S

நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!

''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது''

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதான 8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்... அடுத்தது என்ன?... போலீசார் விளக்கம்!

''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துதான் குற்றவாளிகளை பிடித்துள்ளோம்''

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி... இன்று சென்னை வருகிறார் மாயாவதி... போலீசார் குவிப்பு!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: நாளை காலை விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.

மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல்... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும்? முழு விவரம்!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.

யூரோ கோப்பை காலிறுதியில் அசத்திய ஸ்பெயின், பிரான்ஸ்... பரிதாபமாக வெளியேறிய ஜெர்மனி, போர்ச்சுக்கல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் அபாரமாக ஆடி அரையிறுதிக்குள் நுழைந்தன. சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய ஜெர்மனி அணியும், ரொனோல்டா தலைமையில் விளையாடிய போர்ச்சுக்கல் அணியும் பரிதாபமாக தோற்று வெளியேறின.

அடேங்கப்பா.. இத்தனை பேர்களா? இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இது தொழிலாளர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மணிப்பூர்… மணிப்பூர்.. என முழங்கிய எதிர்க் கட்சியினர்… தொடர்ந்து உரை நிகழ்த்திய பிரதமர் மோடி!

மக்களவையில் எதிர்க் கட்சியினரின் தொடர் முழுக்கங்களுக்கு இடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

'நீட்' தேர்வு முறைகேடு வழக்குகள்... ஜுலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்த ராகுல் காந்தி... அதிர்ந்த பாஜக எம்.பி.க்கள்... இன்று பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!

நேற்று ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் 8க்கும் மேற்பட்ட முறை குறுக்கீடு செய்தனர். ராகுலின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Rahul Gandhi: ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு பாடம்… மக்களவையில் ராகுல் காந்தி அதிரடி!

ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி...நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சின்போது, ''நாடு முழுவதும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தை சேர்ந்தவர்களே வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பதவியில் இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுப்பு... எதிர்க்கட்சிகள் அமளி-வெளிநடப்பு... மக்களவையில் பரபரப்பு!

டெல்லி: நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுத்ததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.