K U M U D A M   N E W S
Promotional Banner

திமுக

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை அப்புறம் ஓட்டுங்க.. ஊழலை கவனிங்க: செல்லூர் ராஜு

“என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது” என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

லாக்கப் மரணத்தில் முதலமைச்சர் பச்சைபொய் பேசலாமா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

போதைப் பொருட்கள் இன்றைக்கு கிராங்களில் கிடைக்கும் அளவில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு

டிசம்பருக்குள் புதிய மாவட்டங்கள் அமையுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திராவிட சித்தாந்த கூட்டணி ஆட்சி தான் - விஜய் பிரபாகரன்

"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர்கள் மட்டும் போதைப்பொருள் பயன்படுத்துவதில்லை – காயத்ரி ரகுராம்

அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு

காமராஜருக்கு பிறகு திமுக ஆட்சியில் தான்...பள்ளிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அதிக பள்ளிக்கட்டிடங்களை உருவாக்கி வருவது நாங்கள் தான் என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் அலட்சியம் ஏன்?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா திமுக டூ அடமான திமுக.. கி.வீரமணி விமர்சனம்

“அண்ணா திமுக போய், அமித்ஷா திமுகவாக மாறி, தற்போது அடமான திமுகவாக உள்ளது” என கி.வீரமணி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்.. பெ.சண்முகம் அறிவுறுத்தல்

அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

அண்ணா பெயரை உச்சரிக்க அருகதை இருக்கிறதா?.. இபிஎஸ் காட்டம்

குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி

"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை.. அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை எனவும் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அதிமுகவினரின் செயல் ஏற்புடையது அல்ல.. ஜவாஹிருல்லா கண்டனம்

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவுக்கு அதிமுகவினர் தாமதமாக கண்டனம் தெரிவித்தது ஏற்புடையதல்ல என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு.. வானதி ஸ்ரீனிவாசன்

அதிமுக - பாஜக கூட்டணி மிக உறுதியாக இருப்பதாகவும் இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை.. நயினார் நாகேந்திரன்

“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கனிமொழி எம்.பி.,

பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்

எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்- அமைச்சர் கோவி.செழியன்

எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.