K U M U D A M   N E W S

காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தகராறு: வடகலை பிரிவினரை கோவில் E.O. தாக்கியதாகப் புகார்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது

டெட் தேர்வு தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.

டெட் தேர்வு தொடர்பாக தீர்ப்பு: “யாரும் பயப்பட வேண்டாம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை தவெக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்...பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு

மதுரையில் தவெக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.

ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வன்னியர் சங்க மகளிர் மாநாடு.. ராமதாஸ் தலைமையில் நிறைவேறிய 14 தீர்மானங்கள்!

தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதில் – எண்ணெய் விவகாரத்தில் வெளியுறவுத்துறை விளக்கம்!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளி எனக்கூறி அலப்பறை- பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு

தான் மாற்றுத்திறனாளி எனக் கூறி மாதம் 250 ரூபாய் உதவித்தொகை கேட்டு மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அலப்பறை செய்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.