ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் அமாவாசை நாட்களில் தம்மோடு வாழ்ந்து மறந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தால் மோட்சம் கிட்டும் என்ற ஐதீகம் உள்ளது.
முன்னோர்களுக்கு திதி
அமாவாசை நாட்களில் ஆடி, தை, மாகாலயா அமாவாசையே சிறப்பு வாய்ந்த அமாவாசியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி, அதிகாலை முதலே பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்த மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பின்டம் வைத்து திதி கொடுத்தனர்.
மேலும் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களின் நீராடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி பின்னர் சுவாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
போலீசார் பாதுகாப்பு
மேலும் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச்செயல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னோர்களுக்கு திதி
அமாவாசை நாட்களில் ஆடி, தை, மாகாலயா அமாவாசையே சிறப்பு வாய்ந்த அமாவாசியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி, அதிகாலை முதலே பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்த மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பின்டம் வைத்து திதி கொடுத்தனர்.
மேலும் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களின் நீராடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி பின்னர் சுவாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
போலீசார் பாதுகாப்பு
மேலும் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச்செயல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.