சென்னை வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இதேபோல வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணை தலைவர் குமாரதாசன் தாக்கல் செய்த மனுவையும் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மழை வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்கும் வகையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் நிலத்தில் ஏன் ஏரி அமைக்கக் கூடாது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்கத் தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, தலைமை செயலாளரிடமிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மழை வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்கும் வகையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் நிலத்தில் ஏன் ஏரி அமைக்கக் கூடாது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்கத் தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, தலைமை செயலாளரிடமிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.