K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசியல்

மதுரையில் மட்டும் ரூ.13,000 கோடி அபராதம்... நடவடிக்கை எப்போது?

மதுரை கிரானைட் குவாரி மற்றும் தாதுமணல் முறைகேடுகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.18,000 கோடிக்கும் மேற்பட்ட அபராதத் தொகை கடந்த 15 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொகையை விரைவாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக கட்டண உயர்வு! ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி"

கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சி கவிழ்க சதி: அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. தலைமறைவான செ.பா தம்பி?

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

எம்ஜிஆர் மாளிகை டூ பனையூர்.. எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைந்தனர்.

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்.. போலீஸ் கஸ்டடியில் அதிமுக பிரமுகர்!

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு!

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை... கூட்டணிக்கு புதிய பெயரா?

முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற தவெக தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான புதிய பெயர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

'3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள்!' - தனிச்சட்டம் கொண்டுவர முதல்வர் விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

'40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம்!' - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.