K U M U D A M   N E W S

அரசியல்

‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி காட்டம்

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிடத்துக்கு எதிராக பேசும் பாஜக.. மௌனம் காக்கும் அதிமுக- அமைச்சர் சிவசங்கர்

அதிமுக, பாஜகவுக்கான மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தி.மு.க-வுக்கு இல்லை - செந்தில் பாலாஜி

நாங்கள் யாரோடும் ? கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பக்கத்தில் மிச்சர் வைத்து இருந்தால் சாப்பிட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள் என அ.தி.மு.க வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை கேள்வி

காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை அப்புறம் ஓட்டுங்க.. ஊழலை கவனிங்க: செல்லூர் ராஜு

“என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது” என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்புவனம் விவகாரம்: முதல்வருக்கு நயினார் 9 கேள்விகள்..!

சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

லாக்அப் இறப்புகள் வேதனை அளிக்கிறது.. செல்வப்பெருந்தகை

லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

டிசம்பருக்குள் புதிய மாவட்டங்கள் அமையுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

வக்பு திருத்த சட்டம் திரும்பப் பெறப்படும்.. ஜவாஹிருல்லா பேட்டி

“வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்றதை போன்று வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வைப்போம்” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் அலட்சியம் ஏன்?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நிலத்தடி நீருக்கு வரி.. திட்டத்தை கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்

“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா திமுக டூ அடமான திமுக.. கி.வீரமணி விமர்சனம்

“அண்ணா திமுக போய், அமித்ஷா திமுகவாக மாறி, தற்போது அடமான திமுகவாக உள்ளது” என கி.வீரமணி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

துணை முதல்வர் பதவி கேட்பீங்களா? டிடிவி தினகரன் அளித்த ரிப்ளை

”பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்” என டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீருக்கு வரி.. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் தலைமையில் தவெக மாநிலச் செயற்குழு கூட்டம்.. வெளியான அறிவிப்பு

தவெகவின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4 ஆம் தேதிபனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்.. பெ.சண்முகம் அறிவுறுத்தல்

அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

அண்ணா பெயரை உச்சரிக்க அருகதை இருக்கிறதா?.. இபிஎஸ் காட்டம்

குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.