பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களை எழுதிய கடிதத்தில், "கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது, அதில்தான் பயணிக்கப் போகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸ் யாருடன் கூட்டணி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், கூட்டணி குறித்த முடிவுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட காட்சிகள் கிட்டத்தட்ட இறுதி செய்த நிலையல், ராமதாஸ் தலைமையிலான பாமக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்யவில்லை. ராமதாஸ் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தொண்டர்களுக்கு கடிதம்
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?
எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.
நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இடஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இடஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பணவீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
கூட்டணி குறித்து சூசகம்
நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.
உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகளுடன் ஆலோசனை
"கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது" என்று ராமதாஸ் எந்த கூட்டணியை குறிப்பிடுகிறார் என்று நாளை தைலாபுரத்தில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ராமதாஸ் யாருடன் கூட்டணி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், கூட்டணி குறித்த முடிவுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட காட்சிகள் கிட்டத்தட்ட இறுதி செய்த நிலையல், ராமதாஸ் தலைமையிலான பாமக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்யவில்லை. ராமதாஸ் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தொண்டர்களுக்கு கடிதம்
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?
எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.
நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இடஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இடஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பணவீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
கூட்டணி குறித்து சூசகம்
நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.
உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகளுடன் ஆலோசனை
"கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது" என்று ராமதாஸ் எந்த கூட்டணியை குறிப்பிடுகிறார் என்று நாளை தைலாபுரத்தில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
LIVE 24 X 7









