தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் மதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு துரை வைகோ எம்.பி., வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று பட்டுக்கோட்டையில் தங்களது கட்சிக்காரரின் திருமணத்திற்கு வருகை தந்துவிட்டு அஞ்சா நெஞ்சன் அழகிரி மணிமண்டபம் வந்து அவர் சிலைக்கு மாலை அணிவித்து செல்ல வேண்டும் என்ற ஆவலில் இங்கே வந்துள்ளேன் என்றார்.
22ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம்
2026 தேர்தல் கூட்டணி பற்றி கேட்கப்பட்டதற்கு, கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. அதே இந்திய கூட்டணி தொடரும் என்றும், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த அதே சிந்தனையில் இருப்பதாகவும், அதனால் இந்த கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என்றார். தேர்தல் கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்று பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தான் கட்சியின் முதன்மைச் செயலாளராக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் இயக்கத்தின் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுகுழு கூடி தான் முடிவு எடுப்பார்கள் என்று கூறினார்.
எதிர்வரும் 22ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட இருக்கிறது. அப்பொழுது தேர்தல் வியூகம் பற்றிய திட்டங்கள் முடிவுகள் எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களும் எப்படி செயல்பட வேண்டும். தேர்தல் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்படும். நமது பலம் என்பது கூட்டணிக்கு எவ்வளவு பலம் தெரிகிறது என்பதை பொருத்தும் தான் சீட் முடிவு செய்யப்படும் என்றார்.
விஜய் களத்திற்கு வர வேண்டும்
நடிகர் விஜயின் அரசியல் வருகை அதிமுகவிற்கு பலவீனமாக இருக்குமா? திமுக பலவீனமாக இருக்கும் என்ற கேள்விக்கு, சகோதரர் விஜய் உச்சபட்ச நட்சத்திரம், அவருக்கு பின்னால் லட்சக்கணக்கான ரசிகர்கள் இளைஞர்கள் உள்ளனர். ஆனால் அது அரசியலில் எந்த அளவிற்கு பலம் தரும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அவர் களத்திற்கு வரவேண்டும். மக்களின் பிரச்னைக்காக போராட வேண்டும். பலமுறை களத்தை சந்தித்து அனுபவம் பெற வேண்டும்.
மக்கள் சார்ந்த பிரச்னைகள், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை களத்தில் நின்று அவர் எதிர்கொள்ள வேண்டும். அவரை நான் சாதாரணமாக எடைபோடவில்லை. இருந்தாலும் மற்ற அரசியல் கட்சிகளின் அனுபவம் வேண்டும். இவர் அரசியலுக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. சினிமா கவர்ச்சி மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் வெற்றி பெற முடியுமா என்றால், அது முடியாது.
தேர்தல் முடிவில் தான் தெரியும்
தனது எதிரி மதவாத கட்சிகள் தான் என்கின்றார். மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். இப்போது வரை அவர் தனித்து தான் இருக்கின்றார். மதவாத சக்திகளின் வாக்குகள் பிளவுபடும்பொழுது, அது மதவாத சக்திகளுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பது போல் ஆகிவிடும். இதையெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது வேண்டுதலாக கூட நீங்க வைத்துக்கொள்ளலாம் என்றார்.
பாஜக- அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, அவர்கள் முன்பிருந்தே கூட்டணியில் தான் இருக்கிறார்கள். பல முறை தேர்தல் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சில நேரம் தோற்றும் உள்ளனர். ஆனால் அவர்கள் வலுவான கூட்டணி என்று கூறிக்கொள்கிறார்கள். எங்கள் கூட்டணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். அதனை மக்கள் ஏற்பதும் ஏற்காததும் தேர்தல் முடிவில் தான் தெரியும் என்றார்.
கருத்து முரண்பாடுகள்
பாமகவின் உள்கட்சி விவகாரத்தை பற்றி கேட்கப்பட்டபோது, அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு என்றும் அது பற்றி தங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள் கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்றும் அந்த கட்சிக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை, அந்த கட்சியின் மூத்தவர்கள், நிர்வாகிகள் பேசி தீர்ப்பார்கள் என்பதால் மாற்று கட்சியினர் அடுத்த கட்சியின் பிரச்னைகளை பற்றி கருத்து சொல்வது முறையல்ல. அது நாகரிகமும் இல்லை என்று கூறினார்.
தொடர்ந்து பட்டுக்கோட்டையில் நேற்று இறந்துபோன 10 ரூபாய் மருத்துவர் டி.ஏ.கே ரத்தனம்பிள்ளை மறைவு என்பது இந்த பகுதியின் பெரும் இழப்பு என்றும் அதுபோன்ற மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இரண்டு ரூபாய் மருத்துவப் பயணத்தை துவங்கி சாகும்வரை பத்து ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்காத ஒரு மருத்துவர் இருந்தால் அது வியப்பாக இருக்கிறது என்றும் கூறினார்.
22ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம்
2026 தேர்தல் கூட்டணி பற்றி கேட்கப்பட்டதற்கு, கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. அதே இந்திய கூட்டணி தொடரும் என்றும், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த அதே சிந்தனையில் இருப்பதாகவும், அதனால் இந்த கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என்றார். தேர்தல் கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்று பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தான் கட்சியின் முதன்மைச் செயலாளராக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் இயக்கத்தின் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுகுழு கூடி தான் முடிவு எடுப்பார்கள் என்று கூறினார்.
எதிர்வரும் 22ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட இருக்கிறது. அப்பொழுது தேர்தல் வியூகம் பற்றிய திட்டங்கள் முடிவுகள் எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களும் எப்படி செயல்பட வேண்டும். தேர்தல் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்படும். நமது பலம் என்பது கூட்டணிக்கு எவ்வளவு பலம் தெரிகிறது என்பதை பொருத்தும் தான் சீட் முடிவு செய்யப்படும் என்றார்.
விஜய் களத்திற்கு வர வேண்டும்
நடிகர் விஜயின் அரசியல் வருகை அதிமுகவிற்கு பலவீனமாக இருக்குமா? திமுக பலவீனமாக இருக்கும் என்ற கேள்விக்கு, சகோதரர் விஜய் உச்சபட்ச நட்சத்திரம், அவருக்கு பின்னால் லட்சக்கணக்கான ரசிகர்கள் இளைஞர்கள் உள்ளனர். ஆனால் அது அரசியலில் எந்த அளவிற்கு பலம் தரும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அவர் களத்திற்கு வரவேண்டும். மக்களின் பிரச்னைக்காக போராட வேண்டும். பலமுறை களத்தை சந்தித்து அனுபவம் பெற வேண்டும்.
மக்கள் சார்ந்த பிரச்னைகள், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை களத்தில் நின்று அவர் எதிர்கொள்ள வேண்டும். அவரை நான் சாதாரணமாக எடைபோடவில்லை. இருந்தாலும் மற்ற அரசியல் கட்சிகளின் அனுபவம் வேண்டும். இவர் அரசியலுக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. சினிமா கவர்ச்சி மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் வெற்றி பெற முடியுமா என்றால், அது முடியாது.
தேர்தல் முடிவில் தான் தெரியும்
தனது எதிரி மதவாத கட்சிகள் தான் என்கின்றார். மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். இப்போது வரை அவர் தனித்து தான் இருக்கின்றார். மதவாத சக்திகளின் வாக்குகள் பிளவுபடும்பொழுது, அது மதவாத சக்திகளுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பது போல் ஆகிவிடும். இதையெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது வேண்டுதலாக கூட நீங்க வைத்துக்கொள்ளலாம் என்றார்.
பாஜக- அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, அவர்கள் முன்பிருந்தே கூட்டணியில் தான் இருக்கிறார்கள். பல முறை தேர்தல் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சில நேரம் தோற்றும் உள்ளனர். ஆனால் அவர்கள் வலுவான கூட்டணி என்று கூறிக்கொள்கிறார்கள். எங்கள் கூட்டணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். அதனை மக்கள் ஏற்பதும் ஏற்காததும் தேர்தல் முடிவில் தான் தெரியும் என்றார்.
கருத்து முரண்பாடுகள்
பாமகவின் உள்கட்சி விவகாரத்தை பற்றி கேட்கப்பட்டபோது, அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு என்றும் அது பற்றி தங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள் கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்றும் அந்த கட்சிக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை, அந்த கட்சியின் மூத்தவர்கள், நிர்வாகிகள் பேசி தீர்ப்பார்கள் என்பதால் மாற்று கட்சியினர் அடுத்த கட்சியின் பிரச்னைகளை பற்றி கருத்து சொல்வது முறையல்ல. அது நாகரிகமும் இல்லை என்று கூறினார்.
தொடர்ந்து பட்டுக்கோட்டையில் நேற்று இறந்துபோன 10 ரூபாய் மருத்துவர் டி.ஏ.கே ரத்தனம்பிள்ளை மறைவு என்பது இந்த பகுதியின் பெரும் இழப்பு என்றும் அதுபோன்ற மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இரண்டு ரூபாய் மருத்துவப் பயணத்தை துவங்கி சாகும்வரை பத்து ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்காத ஒரு மருத்துவர் இருந்தால் அது வியப்பாக இருக்கிறது என்றும் கூறினார்.