தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் இப்படி ஒரு விஷயமா? ஆச்சரியத்தில் பயணிகள்!

கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் வசதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை விமான நிலையத்தில் இப்படி ஒரு விஷயமா? ஆச்சரியத்தில் பயணிகள்!
கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கின் மையம் அமைக்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பத்தாயிரம் உள்நாட்டு பயணிகளும், ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் பயணம் செய்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூபாய் 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது.

இதைத் தொடர்ந்து ரூபாய் 2,000 கோடி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்பொழுது ஓடுதளம் 2,900 மீட்டர் ஆக உள்ளது. இதனை மேலும் 450 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கவும், பயணிகளுக்கான வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் 2031 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். தற்பொழுது உள்ள பழைய குடியிருப்பு பகுதிகளை அகற்றி, அங்கு கார் பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது.

மொத்தம் 524 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கின் மையம் அமைக்க விமான நிலைய ஆணையரகம் ஒப்பந்தம் கூறி உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும், தற்பொழுது உள்ள பார்க்கிங் இடத்தில் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விமான நிலைய பயணிகள் நலச் சங்கத்தினர் கூறும் போது : தற்பொழுது ஒரு மணி நேரத்துக்கு 4 விமானங்கள் கையாளப்பட்டு வருகிறது.

தற்பொழுது இருக்கும் வசதியை கொண்டு மேலும், ஒரு டெர்மினல் கட்டிடம் கட்டி ஒரு மணி நேரத்துக்கு கூடுதலாக 4 விமானங்களை கையாளும் வசதி செய்யப்பட வேண்டும். அப்பொழுது தான் கூடுதலாக பயணிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.