தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிதனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் இனி எப்போதும் நடக்காதவாறு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் பேசியதாவது:
"கண்கள் விட்டு அகலாத காட்சிகள்"
கரூர் சம்பவம் குறித்துத் தனது வேதனையைப் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின், "கரூரில் நடந்த சம்பவம் பெரும் துயரம், கடும் துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக்கூடாத துயரம்." என்று குறிப்பிட்டார்.
"மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று கண்ட காட்சிகள் என் கண்களை விட்டு அகலவில்லை. நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் உள்ளேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னரும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்குச் சென்றேன்.
குழந்தைகள், பெண்கள் உட்பட 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கிக் கொண்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
விசாரணை ஆணையமும் அடுத்த கட்ட நடவடிக்கையும்
நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்பதை அவர் உறுதியளித்தார்.
வதந்தி பரப்புவோருக்கு வேண்டுகோள்
இந்தச் சோகமான சூழலில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொறுப்பற்ற வதந்திகள் குறித்து முதல்வர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
"இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய்ச் செய்திகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள்." என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் நமது தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்
இனிவரும் காலங்களில் இது போன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்க, அரசு சார்பில் புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
"அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் அனைவரது கடமை. எனவே நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைத்தப் பின் அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.
"மனித உயிர்களே அனைத்திற்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காகச் சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் தெரிவிதார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் பேசியதாவது:
"கண்கள் விட்டு அகலாத காட்சிகள்"
கரூர் சம்பவம் குறித்துத் தனது வேதனையைப் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின், "கரூரில் நடந்த சம்பவம் பெரும் துயரம், கடும் துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக்கூடாத துயரம்." என்று குறிப்பிட்டார்.
"மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று கண்ட காட்சிகள் என் கண்களை விட்டு அகலவில்லை. நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் உள்ளேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னரும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்குச் சென்றேன்.
குழந்தைகள், பெண்கள் உட்பட 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கிக் கொண்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
விசாரணை ஆணையமும் அடுத்த கட்ட நடவடிக்கையும்
நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்பதை அவர் உறுதியளித்தார்.
வதந்தி பரப்புவோருக்கு வேண்டுகோள்
இந்தச் சோகமான சூழலில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொறுப்பற்ற வதந்திகள் குறித்து முதல்வர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
"இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய்ச் செய்திகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள்." என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் நமது தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்
இனிவரும் காலங்களில் இது போன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்க, அரசு சார்பில் புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
"அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் அனைவரது கடமை. எனவே நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைத்தப் பின் அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.
"மனித உயிர்களே அனைத்திற்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காகச் சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் தெரிவிதார்.
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 29, 2025
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.#KarurTragedy pic.twitter.com/Ihum9qIWNY