ம.பி. துர்கா சிலை கரைப்பு விபத்து.. 10 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்
கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.
கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
"சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின்" கேட்டுக்கொண்டுள்ளார்.
"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
"துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?" என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.
"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால், கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க" என கரூர் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூரில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடும் நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
13 மாத குழந்தையை "பேய் ஓட்டுதல்" என்ற பெயரில் அடித்துக் கொன்ற டெக்சாஸ் இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை
சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்