வரும் 22ம் தேதி மதுரையில் நடைபெறக்கூடிய முருக பக்தர் மாநாடு குறித்து பாரதி ஜனதா கட்சி சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுனரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.
யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண்
இந்த நிகழ்ச்சியில் மதுரையில் நடைபெரும் முருக பக்தர் மாநாட்டுக்கான திரைப்பாடல் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாககேந்திரன், “இந்த நிகழ்ச்சிகள் 5 லட்சம் பேர் சேர்ந்து ஒன்றாக கந்த சஷ்டி கவசம் பாடல் பாடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி சென்னையில் இருந்து சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் மாநாட்டிற்கு வரவுள்ளனர். முருகன் அடியார்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டிற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் வருகை தர வாய்ப்புள்ளது. மேலும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொள்ளவுள்ளார்.
விசிகவிற்கு எண்ணம்
பாஜக கூட்டணி வலிமையாக இருப்பதன் காரணமாகவே திமுக பாஜக கூட்டணி குறித்து அவதூறுகளை பேசி வருகிறது. விசிகாவிற்கு மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. காங்கிரஸின் துணையுடனே திமுக ஆட்சி பெறுகிறார்கள் என்ற எண்ணம் காங்கிரஸ் காரர்களுக்கு உள்ளது.
மதுரையில் நடைபெரும் முருக பக்தர் மாநாடு அரசியல் கட்சி மாநாடு அல்ல. இதில் அரசியல் பேசப்படாது. அரசியல் கருத்துக்களும் வராது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. எந்த கட்சியாக இருந்தாலும் சரி அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது, திமுகவில் இருந்து யார் வருகிறார்கள் என்ற தகவல் இதுவரை இல்லை என்றார்.
தமிழ்நாட்டை கையில் எடுப்போம்
தமிழத்தில் பாஜக முருகனை கையில் எடுத்துள்ளனர் எடுபடாது என சீமானின் கருத்துக்கு பதிலளித்த அவர், தமிழ் கடவுள் முருகன், தமிழ் கடவுளுக்கு தமிழ்நாட்டில் தான் மாநாடு நடத்த முடியும் என்றார். 22 ஆம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம். 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்றார்.
யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண்
இந்த நிகழ்ச்சியில் மதுரையில் நடைபெரும் முருக பக்தர் மாநாட்டுக்கான திரைப்பாடல் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாககேந்திரன், “இந்த நிகழ்ச்சிகள் 5 லட்சம் பேர் சேர்ந்து ஒன்றாக கந்த சஷ்டி கவசம் பாடல் பாடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி சென்னையில் இருந்து சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் மாநாட்டிற்கு வரவுள்ளனர். முருகன் அடியார்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டிற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் வருகை தர வாய்ப்புள்ளது. மேலும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொள்ளவுள்ளார்.
விசிகவிற்கு எண்ணம்
பாஜக கூட்டணி வலிமையாக இருப்பதன் காரணமாகவே திமுக பாஜக கூட்டணி குறித்து அவதூறுகளை பேசி வருகிறது. விசிகாவிற்கு மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. காங்கிரஸின் துணையுடனே திமுக ஆட்சி பெறுகிறார்கள் என்ற எண்ணம் காங்கிரஸ் காரர்களுக்கு உள்ளது.
மதுரையில் நடைபெரும் முருக பக்தர் மாநாடு அரசியல் கட்சி மாநாடு அல்ல. இதில் அரசியல் பேசப்படாது. அரசியல் கருத்துக்களும் வராது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. எந்த கட்சியாக இருந்தாலும் சரி அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது, திமுகவில் இருந்து யார் வருகிறார்கள் என்ற தகவல் இதுவரை இல்லை என்றார்.
தமிழ்நாட்டை கையில் எடுப்போம்
தமிழத்தில் பாஜக முருகனை கையில் எடுத்துள்ளனர் எடுபடாது என சீமானின் கருத்துக்கு பதிலளித்த அவர், தமிழ் கடவுள் முருகன், தமிழ் கடவுளுக்கு தமிழ்நாட்டில் தான் மாநாடு நடத்த முடியும் என்றார். 22 ஆம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம். 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்றார்.