மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து திருவிக நகர் தொகுதியில் வேட்பாளராக களம்காண்கிறார்.
தன்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று பொற்கொடி கூறியுள்ளார். இதையடுத்து அவர் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கிறது. பொற்கொடிக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.
பொற்கொடிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பு திமுக கூட்டணிக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதனால், தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி தரப்படுவதாக பொற்கொடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் திருமாவளவனும் பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று, ஆங்கில நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ’’கணவர் இறந்தவுடன் பொற்கொடி வீட்டிற்குள் முடங்கி விடாமல் துணிச்சலாக பொது வாழ்விற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது போன்று பெண்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து கணவர் இறப்புக்கு நீதி கோரி போராடிவரும் பெற்கொடியையும், அவரது அரசியல் வருகையையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.
அவருக்கு பாதுகாப்பு தேவை. அவர் துணிச்சலுடன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், அரசியலில் அவருக்கு ஒரு இடமும் தேவைப்படுகிறது. அதிமுக அவருக்கு அந்த இடத்தை வழங்கியிருந்தால், அதை நாங்கள் அதை வரவேற்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.
தன்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று பொற்கொடி கூறியுள்ளார். இதையடுத்து அவர் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கிறது. பொற்கொடிக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.
பொற்கொடிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பு திமுக கூட்டணிக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதனால், தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி தரப்படுவதாக பொற்கொடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் திருமாவளவனும் பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று, ஆங்கில நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ’’கணவர் இறந்தவுடன் பொற்கொடி வீட்டிற்குள் முடங்கி விடாமல் துணிச்சலாக பொது வாழ்விற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது போன்று பெண்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து கணவர் இறப்புக்கு நீதி கோரி போராடிவரும் பெற்கொடியையும், அவரது அரசியல் வருகையையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.
அவருக்கு பாதுகாப்பு தேவை. அவர் துணிச்சலுடன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், அரசியலில் அவருக்கு ஒரு இடமும் தேவைப்படுகிறது. அதிமுக அவருக்கு அந்த இடத்தை வழங்கியிருந்தால், அதை நாங்கள் அதை வரவேற்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.
LIVE 24 X 7









