அரசியல்

கரூர் பெருந்துயரம்: தீபாவளி கொண்டாட வேண்டாம்- விஜய் அறிவுறுத்தல்!

தவெக சார்பில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் பெருந்துயரம்: தீபாவளி கொண்டாட வேண்டாம்- விஜய் அறிவுறுத்தல்!
Vijay instructs not to celebrate Diwali on behalf of TVK
கரூர் துயரத்தில் பங்கேற்கும் விதமாக தவெகவினர் யாரும் இந்தாண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் துயர சம்பவம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தீபாவளி கொண்டாட வேண்டாம்

இந்தச் சோக நிகழ்வைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஆறுதல் தெரிவிக்கும் வகையில், தவெக சார்பில் யாரும் தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நம் கட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு தவெக சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.