K U M U D A M   N E W S

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.

2026ல் தவெக-வின் தாக்கத்தை மக்கள் முடிவு செய்வார்கள்- டிடிவி தினகரன்

அமமுக இன்னும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது என டிடிவி தினகரன் பேட்டி

குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் கொடுத்த அப்டேட்

குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

பணமாலை அணிவித்து அமைச்சருக்கு வரவேற்பு...தவெக மா.செ. செயலால் தி.மலையில் பரபரப்பு

த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மீண்டும் மீண்டுமா? நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா சிகிச்சை..!

நாட்டில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவரும் நிலையில், தற்போது 257 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வரி உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம், வீட்டு வரி ஆகியன உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.