K U M U D A M   N E W S

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம்.. 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நள்ளிரவில் மின்கட்டண உயர்வு.. தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா எப்போது? அன்புமணி கேள்வி

”மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் பேசுன ஆடியோவை வெளியிடுங்க.. அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு பதில்

”ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை” என ஈரோட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் - கர்நாடக உயர்நீதிமன்றம்

தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ - திருநங்கை தம்பதி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநங்கை தம்பதியரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ சொன்னால் போதுமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் இன்று திறப்பு: விமான கட்டணம் அதிரடியாக உயர்வு

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் உயர்வு

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

தீர்ப்பு ஒகே.. யார் அந்த சாருக்கு பதில் எங்கே? EPS சூளுரை

”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வயதான தாய்.. பெண் குழந்தை.. நீதிபதியிடம் மன்றாடிய குற்றவாளி ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி வழங்கபடும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.

FIR லீக்.. திமுக முகம்.. அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பொருட்கள் – சுங்கத்துறை விசாரணை

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில், கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் இருந்து, ரூ.1.3 கோடி மதிப்புடைய, தங்கம், தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகள் ஆகியவற்றை, சுங்கத்துறை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆள தெரியாத மோடி.. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி

ஆள தெரியாத மோடி இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பெரிதளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மதக் கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது போன்ற செயலில் தான் மோடி கவனம் செலுத்துவதாகவும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்துள்ளார்.

கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple

கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்கு தடை?- நடிகர் ஆர்யாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாடு...பாமகவுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு எதிராக மனு...நாளை விசாரணை

பாமக சார்பில் நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.