கோட் சிறப்புக் காட்சி.. தமிழக அரசு புது உத்தரவு.. கொண்டாடும் ரசிகர்கள் - ஏஜிஎஸ் அர்ச்சனா நன்றி
தமிழ்நாட்டில் கோட் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நாளை அதிகாலை 4 மணிக்கும், புதுச்சேரியில் காலை 9 மணிக்கும் கோட் படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் கோட் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நாளை அதிகாலை 4 மணிக்கும், புதுச்சேரியில் காலை 9 மணிக்கும் கோட் படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் சுமார் 700 திரையரங்குகளில் “ கோட்” படம் வெளியாக உள்ள நிலையில், சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று படக்குழுவினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை அதிகாலை 4 மணிக்கும், புதுச்சேரியில் காலை 9 மணிக்கும் “ கோட்” படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. மேலும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கோட் படத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு நாள் 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தமிழக அரசுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள கோட் படம் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது.நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் மோகன் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?