Spiritual Tips : செம்பருத்தி பூக்கள்.. தீராத கடனும் தீர இந்த பரிகாரம் செய்ய மறக்காதீர்கள்!
Spiritual Tips in Tamil : சிவப்பு நிறமான செம்பருத்தி பூ மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய சக்தி கொண்டதாக இருக்கிறது.செம்பருத்தி பூவின் உதவியுடன் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Spiritual Tips in Tamil : வீட்டு தோட்டத்தில் செம்பருத்தி பூக்களை வளர்ப்பது மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக போற்றப்படுகிறது. வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் செம்பருத்திப் பூவினால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் அன்னை லட்சுமியின் அருள்பார்வை உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தேடி வரும்.கடன் பிரச்சினை தீர செம்பருத்தி பூக்களை வைத்து சில பரிகாரங்களை செய்யலாம்.
செம்பருத்தி பூ பரிகாரம்:
வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும். என்று நினைப்பவர்கள் செம்பருத்தி பூவை வைத்து பரிகாரம் செய்யலாம். தொழில் வியாபாரத்தில் நிறைய லாபமும் பணமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செம்பருத்தி பூவை வைத்து பரிகாரம் செய்யலாம்.
தடைகள் நீங்கும்:
செம்பருத்தி பூக்கள் நேர்மறை ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகின்றன. செம்பருத்தி பூ பரிகாரங்கள் மூலம் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு பெருகும். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீச, செல்வம் குறையாமல் இருக்க, அனைத்திலும் வெற்றிகளை குவிக்க, நீங்கள் நிச்சயமாக செம்பருத்தி பூவின் உதவியுடன் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி விடும், பணத்திற்கு பஞ்சம் இருக்காது.உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் குல தெய்வ படத்திற்கு செம்பருத்தி பூக்களை வைத்து மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களது வேண்டுதலை தெய்வம் நிச்சயம் நிறைவேற்றும்.
கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்
உங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்த செம்பருத்தி பூவை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.கடனில் இருந்து விடுபட மிக எளிமையான பரிகாரம் உள்ளது. வெள்ளிக்கிழமை நாளில், விநாயகப் பெருமானை வணங்கி 5 செம்பருத்தி பூக்களை வைத்து பூஜை செய்த பிறகு,அந்த பூக்களை உங்கள் பெட்டகத்திலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைக்கவும். குறைந்தது 7 நாட்களுக்கு இதைச் செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை எளிதில் தீரும். நம்பிக்கையுடன் செய்யக்கூடிய எந்த பரிகாரமும் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.
What's Your Reaction?