சென்னையில் பரபரப்பு.. நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு

ED Raids Ravinder Chandrasekhar House : ரூ.16 கோடி மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் காலை 6 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Jul 30, 2024 - 12:26
Jul 30, 2024 - 13:07
 0
சென்னையில் பரபரப்பு.. நடிகை மகாலட்சுமியின் கணவர்  ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு
Ravinder Chandrasekar house ED Raid

ED Raids Ravinder Chandrasekhar House : சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர்  லட்சுமி வதனா தெருவில் வசித்து வரும் பாலாஜி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பாலாஜி சினிமா தயாரிப்பாளராக உள்ளார். 

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக பிரபலமடைந்ததை விட சோஷியல் மீடியாவில் அதிகம் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின் நடித்த லிப்ட் உள்ளிட்ட சில படங்களை தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இவர் நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் இடையே நடந்த திருமணம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் வனிதாவுக்கும் ரவீந்தருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருமே விவாகரத்தானவர்கள் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு நிறைய விமர்சனங்கள் எழுந்தன.அவ்வப்போது இருவரும் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். 

இதனிடையே கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக போலி ஆவணங்களை காட்டி சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ரூ.16 கோடி ரூபாய் வாங்கிவிட்டு பணத்தையும் கொடுக்காமல், திட்டத்தையும் தொடங்காமல் ரவீந்தர் ஏமாற்றியதாக அவர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மோசடி வழக்கில் சிக்கிய ரவீந்தர், கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார்.

ஒரு மாத சிறை தண்டனைக்கு பிறகு நிபந்தனை ஜாமீன் பெற்ற ரவீந்தர் விடுதலை செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் இரு வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தவும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் ரவீந்தரின் வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது பற்றி விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னை அசோக் நகரில் 19ஆவது அவென்யூவில் கிரீன் பீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரவீந்தர் சந்திரசேகரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

ரூ.16 கோடி மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அவர் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல வடபழனி மன்னார் முதல் தெருவில் அமைந்துள்ள பத்ம சுந்தரம் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் IOB head office manager ஆன மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சத்ய ஸ்ரீ சர்க்கார் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர்  லட்சுமி வதனா தெருவில் வசித்து வரும் பாலாஜி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பாலாஜி சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் சிம்பு நடித்த ஈஸ்வரன் என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow