நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில், இருதரப்பும் மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பும் பேசி முடிவுக்கு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், கடந்த விசாரணையின்போது, வரும் 24-ஆம் தேதிக்குள் சீமான் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தவறினால் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடும் எச்சரிக்கை
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை என விஜயலட்சுமி தரப்பு தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துச் செல்வது? ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக்கூடாது, குறிப்பாக இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஊடகங்களில் பேச கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்படுவீர்கள்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பும் பேசி முடிவுக்கு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், கடந்த விசாரணையின்போது, வரும் 24-ஆம் தேதிக்குள் சீமான் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தவறினால் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடும் எச்சரிக்கை
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை என விஜயலட்சுமி தரப்பு தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துச் செல்வது? ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக்கூடாது, குறிப்பாக இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஊடகங்களில் பேச கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்படுவீர்கள்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.