பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், பதவி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில், இந்த வழக்குகள் முடியும் வரை நான்கு கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த கடிதத்தின் நகலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், பதவி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில், இந்த வழக்குகள் முடியும் வரை நான்கு கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த கடிதத்தின் நகலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.