தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளது. இதற்காக அணைத்து நிலை நிர்வாகிகளையும் அக்கடசியின் தலைமை நியமித்துள்ளது. மேலும், 2026 தேர்தலில் வெற்றி பெரும் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கோவையில் தவெகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்தி, நிர்வாகிகளுடன் விஜய் ஆலேசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாற்று கட்சியின் அவ்வப்போது தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், “தவெகவின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், வரும் ஜூலை 4 ஆம் தேதி சென்னை, பனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், வரும் 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
எனவே, கட்சியின் சட்ட விதிகளின்படி மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளது. இதற்காக அணைத்து நிலை நிர்வாகிகளையும் அக்கடசியின் தலைமை நியமித்துள்ளது. மேலும், 2026 தேர்தலில் வெற்றி பெரும் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கோவையில் தவெகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்தி, நிர்வாகிகளுடன் விஜய் ஆலேசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாற்று கட்சியின் அவ்வப்போது தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், “தவெகவின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், வரும் ஜூலை 4 ஆம் தேதி சென்னை, பனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், வரும் 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
எனவே, கட்சியின் சட்ட விதிகளின்படி மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.