அமைச்சருக்கு அண்ணாமலை எச்சரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் பிகே சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்தநிலையில் தன் துறையின் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முன்பாக சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் அமைச்சர் சேகர்பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கருணாநிதி சமாதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் போன்று மலர்களால் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். நாத்திகம் பேசும் திமுகவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் போன்ற வடிவத்தை கருணாநிதி சமாதியில் பூக்களை கொண்டு வைக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கண்டனம்
இதேப்போல் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “ மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது. "பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?
சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக ஐடி விங் எதிர்ப்பு
இதேபோல் அதிமுக ஐடிவிங் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ கருணாநிதி சமாதி மேல் கோயில் கோபுரம்- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத ஸ்டாலின் மாடல் அரசு!
இறந்தவர் சமாதியில் அடிப்படை அறிவு உள்ள எவராவது கோபுரம் வைப்பார்களா? உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா சேகர்பாபு ?
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல், அடிபொடிகளை ஏவிவிட்டு கடவுள் நிந்தனைகளை செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்ட தீயசக்தியின் புதைவிடத்தில் கோபுரத்தை வைப்பதை விட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா? “ என கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் பிகே சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்தநிலையில் தன் துறையின் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முன்பாக சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் அமைச்சர் சேகர்பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கருணாநிதி சமாதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் போன்று மலர்களால் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். நாத்திகம் பேசும் திமுகவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் போன்ற வடிவத்தை கருணாநிதி சமாதியில் பூக்களை கொண்டு வைக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கண்டனம்
இதேப்போல் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “ மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது. "பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?
சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக ஐடி விங் எதிர்ப்பு
இதேபோல் அதிமுக ஐடிவிங் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ கருணாநிதி சமாதி மேல் கோயில் கோபுரம்- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத ஸ்டாலின் மாடல் அரசு!
இறந்தவர் சமாதியில் அடிப்படை அறிவு உள்ள எவராவது கோபுரம் வைப்பார்களா? உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா சேகர்பாபு ?
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல், அடிபொடிகளை ஏவிவிட்டு கடவுள் நிந்தனைகளை செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்ட தீயசக்தியின் புதைவிடத்தில் கோபுரத்தை வைப்பதை விட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா? “ என கேள்வி எழுப்பி உள்ளது.