கோவை, பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த பாராமெடிக்கல் அலாய்டு சயின்ஸ் கல்லூரியில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த வானதி என்பவரது மகள் அனுப்பிரியா (18) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கு அங்கு உள்ள மருத்துவமனை 4 - வது கட்டிடத்தில் பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. மதியம் அனைவரும் உணவு அருந்த சென்ற நிலையில் மாணவ - மாணவிகள் அவர்கள் உடமைகளை பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்துவிட்டு சென்று உள்ளனர். இதில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியின் பையில் இருந்த 1500 ரூபாய் திடீரென மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுகுறித்து பேராசிரியர்களிடம் கூறி உள்ளார்.
அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது அனுப்பிரியா தனியாக அந்த அறையை விட்டு வெளியே வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாணவி பணத்தை எடுத்து இருக்கலாம் என பேராசிரியர்கள் சந்தேகப்பட்டு உள்ளனர். உடனே இது குறித்து பாராமெடிக்கல் கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அனுப்பிரியாவை கல்லூரி முதல்வர் உள்ள ஐந்தாவது மாடி கட்டிட அறையில் வைத்து முதல்வர் மற்றும் பேராசிரியர் விசாரித்து உள்ளனர். அப்பொழுது சக மாணவர்களும் இருந்து உள்ளனர். மதியம் இரண்டு மணி முதல் மாலை வரை விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அனுப்பிரியா தான் எந்த தவறும் செய்யவில்லை பணத்தை எடுக்கவில்லை என்று மறுத்து உள்ளார். மற்ற மாணவ - மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிகளுக்கும், வீடுகளுக்கும் சென்ற நிலையில் அனுப்பிரியாவை அவர்கள் விடவில்லை என கூறப்படுகிறது. மாலை 6:30 மணி அளவில் அனுப்பிரியாவை ஐந்தாவது மாடியில் இருந்து வீட்டுக்கு செல்லும்படி கூறி அனுப்பி உள்ளனர். இதனால் சோகத்துடன் வெளியேறிய அனுப்பிரியா நான்காவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென்று அங்கு இருந்து கீழே குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சக மாணவ-மாணவிகள் சம்பவம் நடந்த இடத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேராசிரியர்களை வெளியில் செல்ல விடாமல் மாணவிகள் தடுத்து உள்ளனர். அதன் பிறகு மாணவி அனுப்பிரியா உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு இடையே அனுப்பிரியா தற்கொலை செய்த தகவல் திருவண்ணாமலையில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தந்தை இல்லாத நிலையில் ஒரே மகளான அனுப்பிரியா இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வானதி உறவினர்களுடன் கோவைக்கு விரைந்து வந்துள்ளார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் வானதி புகார் அளித்துள்ளார். அனுப்பிரியா இறப்பிற்கு நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவ அறை முன்பு மாணவ-மாணவிகள் திரண்டனர். இதனால் அங்கே போலீஸ் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாக தரப்பில் இருந்து உயிரிழந்த அனுப்பிரியாவிடம் விசாரணை மேற்கொண்ட மணிமொழி, லாவண்யா மற்றும் உமா ஆகியோர் உயிரிழந்த குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் அவர்களுக்கு போதுமான விளக்கம் இல்லை என்று கூறி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதை அடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர், முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த மாணவி அனுப்பிரியாவின் உடலை வாங்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து கோவை பீளமேடு காவல்துறையினர் அனுப்பிரியா மரணம் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கு அங்கு உள்ள மருத்துவமனை 4 - வது கட்டிடத்தில் பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. மதியம் அனைவரும் உணவு அருந்த சென்ற நிலையில் மாணவ - மாணவிகள் அவர்கள் உடமைகளை பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்துவிட்டு சென்று உள்ளனர். இதில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியின் பையில் இருந்த 1500 ரூபாய் திடீரென மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுகுறித்து பேராசிரியர்களிடம் கூறி உள்ளார்.
அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது அனுப்பிரியா தனியாக அந்த அறையை விட்டு வெளியே வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாணவி பணத்தை எடுத்து இருக்கலாம் என பேராசிரியர்கள் சந்தேகப்பட்டு உள்ளனர். உடனே இது குறித்து பாராமெடிக்கல் கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அனுப்பிரியாவை கல்லூரி முதல்வர் உள்ள ஐந்தாவது மாடி கட்டிட அறையில் வைத்து முதல்வர் மற்றும் பேராசிரியர் விசாரித்து உள்ளனர். அப்பொழுது சக மாணவர்களும் இருந்து உள்ளனர். மதியம் இரண்டு மணி முதல் மாலை வரை விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அனுப்பிரியா தான் எந்த தவறும் செய்யவில்லை பணத்தை எடுக்கவில்லை என்று மறுத்து உள்ளார். மற்ற மாணவ - மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிகளுக்கும், வீடுகளுக்கும் சென்ற நிலையில் அனுப்பிரியாவை அவர்கள் விடவில்லை என கூறப்படுகிறது. மாலை 6:30 மணி அளவில் அனுப்பிரியாவை ஐந்தாவது மாடியில் இருந்து வீட்டுக்கு செல்லும்படி கூறி அனுப்பி உள்ளனர். இதனால் சோகத்துடன் வெளியேறிய அனுப்பிரியா நான்காவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென்று அங்கு இருந்து கீழே குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சக மாணவ-மாணவிகள் சம்பவம் நடந்த இடத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேராசிரியர்களை வெளியில் செல்ல விடாமல் மாணவிகள் தடுத்து உள்ளனர். அதன் பிறகு மாணவி அனுப்பிரியா உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு இடையே அனுப்பிரியா தற்கொலை செய்த தகவல் திருவண்ணாமலையில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தந்தை இல்லாத நிலையில் ஒரே மகளான அனுப்பிரியா இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வானதி உறவினர்களுடன் கோவைக்கு விரைந்து வந்துள்ளார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் வானதி புகார் அளித்துள்ளார். அனுப்பிரியா இறப்பிற்கு நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவ அறை முன்பு மாணவ-மாணவிகள் திரண்டனர். இதனால் அங்கே போலீஸ் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாக தரப்பில் இருந்து உயிரிழந்த அனுப்பிரியாவிடம் விசாரணை மேற்கொண்ட மணிமொழி, லாவண்யா மற்றும் உமா ஆகியோர் உயிரிழந்த குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் அவர்களுக்கு போதுமான விளக்கம் இல்லை என்று கூறி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதை அடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர், முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த மாணவி அனுப்பிரியாவின் உடலை வாங்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து கோவை பீளமேடு காவல்துறையினர் அனுப்பிரியா மரணம் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.