மதுரையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரும் ஜுலை 6 ஆம் தேதி எழுச்சி பேரணி மாநாடு வண்டியூர் சுங்கசாவடி பகுதியில் உள்ள திடலில் நடைபெற உள்ளது. அதற்கான தொடக்கவிழாவில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்று கட்சியின் கொடியேற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் தொகைக்கேற்ப ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்ற வரையில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும், வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜூலை 6ம் தேதி எழுச்சி பேரணி மற்றும் மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் 5 லட்சம் பேர் வரையில் பங்கேற்பார்கள்.
விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றத்திலும் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை . குறிப்பாக நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் 80 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 24 பேர் மட்டும் உள்ளனர்.
இதேபோல் சட்டமன்றங்களிலும் குறைவான பிரதிநிதித்துவம் உள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் உள்ளனர். சட்டம் இயற்றும் மன்றங்களில் இஸ்லாமியர்களின் பிரத்திநிதித்துவம் கொடுப்பது தான் ஜனநாயாகத்திற்கு நல்லது.
வக்பு திருத்த சட்டம் தீய நோக்கத்திற்காக வரப்பட்டுள்ளது. உபி-யில் இஸ்லாமியர்களின் இடங்கள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டது. வக்பு திருத்த சட்டம் மற்றொரு புல்டோசர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது உமிட் போர்ட் மூலம் வக்பு சொத்துக்களின் ஆவணங்களை பதிவு செய்யவேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கு எதிராக உள்ளது. வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்றதை போன்று வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வெற்றி பெறுவோம்.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் தான் தொடர்வோம். திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, மகளீர் உரிமை தொகை வழங்குவது மூலம் திமுக ஆட்சிக்கு மக்கள் நன்றி சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் தொகைக்கேற்ப ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்ற வரையில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும், வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜூலை 6ம் தேதி எழுச்சி பேரணி மற்றும் மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் 5 லட்சம் பேர் வரையில் பங்கேற்பார்கள்.
விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றத்திலும் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை . குறிப்பாக நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் 80 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 24 பேர் மட்டும் உள்ளனர்.
இதேபோல் சட்டமன்றங்களிலும் குறைவான பிரதிநிதித்துவம் உள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் உள்ளனர். சட்டம் இயற்றும் மன்றங்களில் இஸ்லாமியர்களின் பிரத்திநிதித்துவம் கொடுப்பது தான் ஜனநாயாகத்திற்கு நல்லது.
வக்பு திருத்த சட்டம் தீய நோக்கத்திற்காக வரப்பட்டுள்ளது. உபி-யில் இஸ்லாமியர்களின் இடங்கள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டது. வக்பு திருத்த சட்டம் மற்றொரு புல்டோசர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது உமிட் போர்ட் மூலம் வக்பு சொத்துக்களின் ஆவணங்களை பதிவு செய்யவேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கு எதிராக உள்ளது. வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்றதை போன்று வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வெற்றி பெறுவோம்.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் தான் தொடர்வோம். திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, மகளீர் உரிமை தொகை வழங்குவது மூலம் திமுக ஆட்சிக்கு மக்கள் நன்றி சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.