அரசியல்

சிங்கப்பூருக்கு சீக்ரெட் பயணம்..! டெல்லி தலைமைக்கே தெரியாத ரகசியம்..! தனி ரூட் எடுக்கும் அண்ணாமலை..?

தமிழக பாஜக தலைவராக நயினார் நியமிக்கப்பட்டதில் இருந்தே அண்ணாமலையின் மவுசு கட்சியில் குறையத் தொடங்கியதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது, எனவே, அவர் தனக்கான தனி ரூட்டை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் டெல்லி தலைமை கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்கு சீக்ரெட் பயணம்..! டெல்லி தலைமைக்கே தெரியாத ரகசியம்..! தனி ரூட் எடுக்கும் அண்ணாமலை..?
சிங்கப்பூருக்கு சீக்ரெட் பயணம்..! டெல்லி தலைமைக்கே தெரியாத ரகசியம்..!
2021ம் ஆண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இதன்பின்னர் பா.ஜ.க. மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அண்ணாமலை தலைமையின் கீழ் பா.ஜ.க அதிவேக வளர்ச்சியடைந்து வருவதாக சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆனது. அண்ணாமலை தலைவர் ஆன பிறகுதான் அவரை ப்ரொமோஷன் செய்துகொள்ள ஏராளமான சோஷியல் மீடியா அக்கவுன்ட்கள் உருவாக்கப்பட்டன.

பா.ஜ.க.வின் ஐடி அணி என்பதைக் காட்டிலும் அண்ணாமலை தனக்கென ஒரு வார் ரூமை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இந்த வார் ரூம் மூலம் அண்ணாமலைக்கு எதிரானவர்கள் குறிவைக்கப்பட்டு கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டதாகவும், இதனை காயத்ரி ரகுராம், சி.டி.நிர்மல் குமார் போன்றோர் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருந்தனர் என்றும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையின் தலைவர் பதவிக் காலம் முடிந்து புதிய தலைவராக நயினார் நியமனம் செய்யப்பட்ட பிறகும், இந்த வார் ரூம்கள் அ.தி.மு.க. மீதான தாக்குதலை நிறுத்தியபாடில்லை.

இந்த நிலையில், படாதபாடுபட்டு மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியை உருவாக்கி இருக்கும் பா.ஜ.க. டெல்லி தலைமைக்கு அண்ணாமலையின் வார் ரூம் பெரிய நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அ.தி.மு.க தொடர்பாகவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தொடர்பாகவும் அண்ணாமலை வார் ரூம் மூலம் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இதனால் கூட்டணியில் விரிசல் விழும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, நயினார் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்விலும் சரி, பாஜகவினரின் எந்த முக்கிய நிகழ்விலும் அண்ணாமலை கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசனின் 80 ஆவது பிறந்தநாளான சதாபிஷேக விழா கடந்த வராம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பாகுபாடின்றி பலரும் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினி கூட, முன்னதாக இல.கணேசன் வீட்டிற்குச் சென்று வாழ்த்திவிட்டு வந்திருந்தார்.

பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் ஆஜராகியிருந்த நிலையில், அண்ணாமலை மட்டும் மிஸ் ஆகியிருந்ததாகக் கூறப்படுகிறது. என்னவென்று விசாரித்தபோது, அண்ணாமலை கோடை விடுமுறைக்காக சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், டெல்லி தலைமைக்குக் கூட தெரியாத வகையில், எந்தத் தகவலையும் சொல்லாமல் அண்ணாமலை தன்னுடைய சிங்கப்பூர் பயணத்தை படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறாராம். இது தலைமையின் காதுகளை எட்டவே, தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் முக்கிய நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதோடு, தனி ரூட் எடுக்கத் தொடங்கி இருக்கிறாராம் அண்ணாமலை. இதனால் டெல்லி தலைமை முகமெல்லாம் சிவந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது.

அப்படி என்ன நேர் எதிர் ரூட் எடுக்கிறார் அண்ணாமலை என்று விசாரித்தபோது, பாஜகவில் உள்ள தனது ஆதரவாளர்களை ஒன்றிணைத்து ஒரு புதிய யோசனையில் அண்ணாமலை இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விரைவிலேயே இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.