அரசியல்

மனு ஏற்பு: மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்

வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

  மனு ஏற்பு: மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்
மாநிலங்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேரின் மனு ஏற்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் கமல்ஹாசன் செய்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. திமுகவில் 3 வேட்பாளர்களும், அதிமுகவில் 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர்.மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாத சுயேட்சையாக தாக்கல் செய்த 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மாநிலங்களவைத் தேர்தல்

தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பத்விக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேப்போல் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இந்த நிலையில் மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. இதனிடையே மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் செய்துகொண்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மநீமவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் மநீம சார்பில் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்

அதிமுக தரப்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 6 பேரும் அண்மையில் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்றுடன் வேட்பு மனுதாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதில் திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், மநீம சார்பில் ஒருவரும், சுயேட்சைகள் 7 பேர் என மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழியாத சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் 6 பேர் மட்டுமே களத்தில் உள்ள அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். இதன் மூலம் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் மாநிலங்களவை எம்.பி.யாவது உறுதியாகியுள்ளது.