பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் இருந்தனர்.
30 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்டனர்
அப்போது பேசிய அவர், இன்று மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பரவலான வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2047ல் முன்னேறிய நாடாக இந்தியா திகழும் நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். மோடியின் செயல்பாடுகள் அனைத்தும், பொதுமக்களின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு இருந்து வருகின்றன.
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிர்வாகத்தை மோடி வழங்கி வருகிறார். கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், மக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஊழலற்ற, வெளிப்படைத் தன்மையான அரசை மோடி வழங்கி வருகிறார்.மோடி அரசில் 30 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அனைத்து துனைகளிலும் சுயசார்பு திறன் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்றார்.
தமிழின் தொன்மைக்கு அங்கீகாரம்
ஊழல் குறித்தும், சிஏஜி அறிக்கை குறித்தும் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, சிஏஜி அறிக்கை, அனுமானத்தின் அடிப்படையிலானது என்றும், அது இறுதியான முடிவுகள் அல்ல என்றும், திட்டம் அறிவிக்கும் போது அவர் கூடிய மதிப்பீடும், செயல்படுத்தும் போது மாறுபடக்கூடிய மதிப்பீடுகள் காரணமாகவும் இதுபோன்ற வேறுபாடுகள் வந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததை போன்று எந்த ஊழல்களும் இந்த ஆட்சியில் கிடையாது. கீழடி குறித்து பேசிய அமைச்சர், தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு, தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் குறித்து பல வகையான ஆய்வுகள் கீழடியில் நடந்த போதும் கூட இன்னும் அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவைப்படுகின்றன என்றும், அப்படி அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான மேலும் ஆய்வுகளும், முடிவுகளும் கிடைக்கும்போது, தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிப்பதற்கு தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது எனக்கூறினார்.
30 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்டனர்
அப்போது பேசிய அவர், இன்று மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பரவலான வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2047ல் முன்னேறிய நாடாக இந்தியா திகழும் நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். மோடியின் செயல்பாடுகள் அனைத்தும், பொதுமக்களின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு இருந்து வருகின்றன.
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிர்வாகத்தை மோடி வழங்கி வருகிறார். கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், மக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஊழலற்ற, வெளிப்படைத் தன்மையான அரசை மோடி வழங்கி வருகிறார்.மோடி அரசில் 30 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அனைத்து துனைகளிலும் சுயசார்பு திறன் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்றார்.
தமிழின் தொன்மைக்கு அங்கீகாரம்
ஊழல் குறித்தும், சிஏஜி அறிக்கை குறித்தும் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, சிஏஜி அறிக்கை, அனுமானத்தின் அடிப்படையிலானது என்றும், அது இறுதியான முடிவுகள் அல்ல என்றும், திட்டம் அறிவிக்கும் போது அவர் கூடிய மதிப்பீடும், செயல்படுத்தும் போது மாறுபடக்கூடிய மதிப்பீடுகள் காரணமாகவும் இதுபோன்ற வேறுபாடுகள் வந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததை போன்று எந்த ஊழல்களும் இந்த ஆட்சியில் கிடையாது. கீழடி குறித்து பேசிய அமைச்சர், தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு, தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் குறித்து பல வகையான ஆய்வுகள் கீழடியில் நடந்த போதும் கூட இன்னும் அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவைப்படுகின்றன என்றும், அப்படி அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான மேலும் ஆய்வுகளும், முடிவுகளும் கிடைக்கும்போது, தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிப்பதற்கு தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது எனக்கூறினார்.