தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழ இருப்பதாக வெளியாகும் தகவல் திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில், அமைச்சர் பதவியா? ஜாமின் வேண்டுமா? என்பதை 28ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நீதிமன்றம் வைத்த கெடுவால் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவுள்ளார் என கூறப்பட்டு வருகிறது.
அதேபோல் சென்னை உயர்நீதின்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்ததும், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த பொன்முடி மீதான வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டதும் தி.மு.க தரப்பு பின்னடைவாக உள்ளது. இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளால், தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் எனக் கூறப்பட்டுவரும் நிலையில், அமைச்சர்களின் இலாக்கா மாற்றப்படுமா? இல்லை,கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில், அமைச்சர் பதவியா? ஜாமின் வேண்டுமா? என்பதை 28ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நீதிமன்றம் வைத்த கெடுவால் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவுள்ளார் என கூறப்பட்டு வருகிறது.
அதேபோல் சென்னை உயர்நீதின்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்ததும், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த பொன்முடி மீதான வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டதும் தி.மு.க தரப்பு பின்னடைவாக உள்ளது. இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளால், தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் எனக் கூறப்பட்டுவரும் நிலையில், அமைச்சர்களின் இலாக்கா மாற்றப்படுமா? இல்லை,கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.