அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
”தி.மு.க அமைச்சர்கள் தொடர்ந்து மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர். ராஜகண்ணப்பன் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். அவர் நிலை தடுமாறிப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அமித்ஷா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியைப் பலப்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் கூட்டணியில் இணைவது குறித்துத் தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார்; காத்திருந்து பார்ப்போம்” என்றார்.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியுள்ளாரே, அதற்கு உங்கள் பதில் என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கைகள் வேறுபட்டாலும், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். உறுதியாகக் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான் என்று நான் நம்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதைப் பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள். எங்கள் கூட்டணி நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் உறுதியாக எங்கள் அணிக்கு வரும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. மட்டுமே உள்ளதாகக் கூறுவது அச்சத்தின் காரணமாகத்தான். தமிழகத்தின் இன்றைய நிலையைப் பார்த்தால், 2036-ல் அல்ல, 2026-லேயே தி.மு.க. ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாகத்தான் பதில் அளித்துள்ளார்.
தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார். 2021-லும் அவர் முயற்சி செய்தார், 2026-ல் அது பலன் அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையூறு வரும் வகையில் ஏதாவது கருத்து சொன்னால் அது நாகரிகமாக இருக்காது” என்றார்.
எனக்கு ஜோசியம் தெரியாது: டிடிவி தினகரன்
பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக கட்சி இருக்கிறதா? என எழுப்பிய கேள்விக்கு, “தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால்தான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம்தான் கேட்க வேண்டும். பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான். பா.ம.க. நிறுவனர் ராமதாஸை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம்தான் கேட்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
போதைப்பொருள் தொடர்பாக முன்னணி நடிகர்கள் கைதாகியுள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, “போதைப்பொருள் பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழும் நிலையில் உள்ளார்கள். தமிழ்நாடு போதைப்பொருள் சந்தையாக மாறியுள்ளது. இதைச் சரி செய்யாமல் மூன்று தேர்தல் குறித்துக் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் பதவி கேட்பீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு, "உரிய தொகுதிகளைத் தேர்தல் நேரத்தில் பெற்று நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். தற்பொழுதுதான் கூட்டணி பலப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.
”தி.மு.க அமைச்சர்கள் தொடர்ந்து மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர். ராஜகண்ணப்பன் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். அவர் நிலை தடுமாறிப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அமித்ஷா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியைப் பலப்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் கூட்டணியில் இணைவது குறித்துத் தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார்; காத்திருந்து பார்ப்போம்” என்றார்.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியுள்ளாரே, அதற்கு உங்கள் பதில் என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கைகள் வேறுபட்டாலும், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். உறுதியாகக் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான் என்று நான் நம்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதைப் பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள். எங்கள் கூட்டணி நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் உறுதியாக எங்கள் அணிக்கு வரும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. மட்டுமே உள்ளதாகக் கூறுவது அச்சத்தின் காரணமாகத்தான். தமிழகத்தின் இன்றைய நிலையைப் பார்த்தால், 2036-ல் அல்ல, 2026-லேயே தி.மு.க. ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாகத்தான் பதில் அளித்துள்ளார்.
தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார். 2021-லும் அவர் முயற்சி செய்தார், 2026-ல் அது பலன் அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையூறு வரும் வகையில் ஏதாவது கருத்து சொன்னால் அது நாகரிகமாக இருக்காது” என்றார்.
எனக்கு ஜோசியம் தெரியாது: டிடிவி தினகரன்
பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக கட்சி இருக்கிறதா? என எழுப்பிய கேள்விக்கு, “தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால்தான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம்தான் கேட்க வேண்டும். பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான். பா.ம.க. நிறுவனர் ராமதாஸை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம்தான் கேட்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
போதைப்பொருள் தொடர்பாக முன்னணி நடிகர்கள் கைதாகியுள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, “போதைப்பொருள் பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழும் நிலையில் உள்ளார்கள். தமிழ்நாடு போதைப்பொருள் சந்தையாக மாறியுள்ளது. இதைச் சரி செய்யாமல் மூன்று தேர்தல் குறித்துக் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் பதவி கேட்பீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு, "உரிய தொகுதிகளைத் தேர்தல் நேரத்தில் பெற்று நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். தற்பொழுதுதான் கூட்டணி பலப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.