இந்தியா

ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: நெரிசலில் 3 பேர் பலி-50 பேர் படுகாயம்

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: நெரிசலில் 3 பேர் பலி-50 பேர் படுகாயம்
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத ராத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பலர் ஆயிரம் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட்த்தை கட்டுப்படுத்த முய்டியாமல் மாநில போலீசார் திணறி வருகின்றனர்.

கூட்டநெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

இந்த நிலையில், ஒடிசாவின் பூரியில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜெகநாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ர தேவி சிலைகளை சுமந்து செல்லும் மூன்று ரதங்கள், யாத்திரை தொடங்கிய ஜெகநாதர் கோயிலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்கு அருகில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அதிகாலை 4.30 மணியளவில், புனித ரதங்கள் குண்டிச்சா கோவிலில் இருந்தன. தரிசனத்திற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். கூட்டம் அதிகரித்ததால், சிலர் கீழே விழுந்து நெரிசல் ஏற்பட்டது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் பிரபாதி தாஸ் மற்றும் பசந்தி சாஹு என்ற இரண்டு பெண்கள் மற்றும் 70 வயதான பிரேமகாந்த் மொஹந்தி ஆகியோர் அடங்குவர். மூவரும், குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ரத யாத்திரைக்காக பூரிக்கு வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாடு புகார்

சம்பவ இடத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் ஏற்பாடு போதுமானதாக இல்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையில்தான் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் பூரி கலெக்டர் சித்தார்த் சங்கர் ஸ்வைன் தெரிவித்தார். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஆனால் கூட்டம் திடீரென கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

ரத யாத்திரையின் போது, ஜெகநாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ர தேவி ஆகியோரின் சிலைகளைக் கொண்ட மூன்று பிரமாண்டமான ரதங்கள் ஏராளமான பக்தர்கள் இழுத்தனர். புனித ரதங்கள் குண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மூன்று தெய்வங்களும் ஒரு வாரம் அங்கேயே தங்கி, பின்னர் ஜெகநாதர் கோயிலுக்குத் திரும்புகிறார்கள்.

நவீன் பட்நாயக் விமர்சனம்

இதற்கிடையில், இந்த முறை ரத யாத்திரை தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக ஒரு அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. பிஜு ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் இதை பயங்கரமான குழப்பம் என்று விமர்சித்துள்ளார். மேலும் நாம் செய்யக்கூடியது பிரார்த்தனை செய்வது மட்டுமே.இந்த ஆண்டு இந்த தெய்வீக விழாவை பயங்கரமான குழப்பத்திற்கு காரணமான அனைவரையும் கடவுள் ஜெகநாதர் மன்னிக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு ஒடிசா சட்டத்துறை அமைச்சர் பிரிதிவிராஜ் ஹரிசந்தன், பட்நாயக்கின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். அதாவது, கடந்த காலங்களில், பிஜு ஜனதா தள அரசாங்கம் தவறுகளைச் செய்து ஜெகநாதரை அவமதித்தது. 1977 முதல், ரதங்கள் எப்போதும் இரண்டாவது நாளில் குண்டிச்சா கோயிலை அடைந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.