டெல்லியில் நேற்று (ஜூன் 19) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அதற்காக வெட்கப்படும் காலம் வரும்.
முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்நிய மொழிகளை பேசுவதை காட்டிலும் நம் தாய் மொழிகளை பேசுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆங்கிலம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்தை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆங்கிலம் ஒரு அணை அல்ல, அது ஒரு பாலம். ஆங்கிலம் வெட்கக்கேடானது அல்ல, அது அதிகாரமளிப்பது. அது ஒரு சக்தி, சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.
இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்க பாஜக-ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் கேள்விகள் கேட்கவும், முன்னேறவும், சமத்துவத்தை அடையவும் அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில், ஆங்கிலம் ஒருவரின் தாய்மொழியைப் போலவே முக்கியமானது, ஏனெனில் அது வேலைவாய்ப்பை வழங்கும் மற்றும் ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் இந்தியாவை நோக்கி செல்ல இதுவே பாதையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்நிய மொழிகளை பேசுவதை காட்டிலும் நம் தாய் மொழிகளை பேசுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆங்கிலம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்தை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆங்கிலம் ஒரு அணை அல்ல, அது ஒரு பாலம். ஆங்கிலம் வெட்கக்கேடானது அல்ல, அது அதிகாரமளிப்பது. அது ஒரு சக்தி, சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.
இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்க பாஜக-ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் கேள்விகள் கேட்கவும், முன்னேறவும், சமத்துவத்தை அடையவும் அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில், ஆங்கிலம் ஒருவரின் தாய்மொழியைப் போலவே முக்கியமானது, ஏனெனில் அது வேலைவாய்ப்பை வழங்கும் மற்றும் ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் இந்தியாவை நோக்கி செல்ல இதுவே பாதையாகும்" என்று தெரிவித்துள்ளார்.