தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னையில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் 120 மாவட்டங்களைச் சேர்ந்த 2,150 நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வக்பு மசோதவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்
2. மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்.
3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது.
4. இரு மொழி கொள்கையில் உறுதி.
5. நாடாளுமன்றம் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
6. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
7. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
8. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
9. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம்.
10. டாஸ்மாக் 1000 கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும்
11. சமூக நீதியை நிலை நிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
12. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு ஒரே தீர்வு.
13. பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டும்.
14. கொள்கை தலைவர்கள் வழியில் பயணிப்போம்.
15. தலைவருக்கே முழு அதிகாரம்.
16. கழக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
17. கழகத்துக்காக அயராது பாடுபட்டு மறைந்த கழக செயல் வீரர்களுக்கு இரங்கல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?






