K U M U D A M   N E W S
Advertisement

உலகம்

இந்தியா - மாலத்தீவு இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஜோ பைடனுக்கு புற்றுநோய் உறுதி .. வெளியான மருத்துவ அறிக்கை!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது சமீபத்திய மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது வழக்கமான உடல் பரிசோதனையின் போது, அவரது உடலில் கண்டறியப்பட்ட ஒரு கட்டியை சோதனை செய்தபோது, இது புரோஸ்டேட் புற்றுநோய் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் 267 தலைவராக 14ஆம் லியோ பதவியேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Food Crises: பசியில் வாடிய 300 மில்லியன் மக்கள்.. வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!

உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கை-2025 வெள்ளிக்கிழமை (மே 16,2025) வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த அறிக்கையை ’மனிதக்குலத்தின் தோல்வி’ என குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

கடந்த 2022 ஆம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை ஒருவர் விழா மேடையில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலில் முயன்ற ஹாதி மாதாருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தொந்தரவு செய்யும் டிரம்ப்... ஆப்பிள் CEO-விடம் டிரம்ப் பேசியது என்ன?

கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த ஒரு வணிக நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான உரையாடலின் போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று கோரியதாக தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

பகவத் கீதையுடன் அமைச்சராக பொறுப்பேற்பு- யார் இந்த அனிதா ஆனந்த்?

Anita Anand: கனடா- அமெரிக்கா இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

மேப்பில் பெயரை மாற்றிய கூகுள்.. வழக்குத் தொடர்ந்தது மெக்சிகோ

காலம் காலமாக மெக்சிகோ வளைகுடா என அழைக்கப்பட்டு வந்த பகுதியை கூகுள் மேப்பில் “அமெரிக்க வளைகுடா” என குறிப்பிட்டுள்ளதற்காக கூகுள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மெக்சிகோ அரசு.

ChatGPT-யால் வந்த வினை.. குடும்பத்தை பிரித்த காபி கப்

ChatGPT-யில் தனது கணவர் காபி அருந்தியது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டாசியோகிராஃபி முறையில் விளக்கம் கேட்ட போது, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ChatGPT பதில் அளித்ததால், விவாகரத்து நோக்கி நகர்ந்துள்ளார் மனைவி.

புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய போப் பதினான்காம் லியோவிற்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து