K U M U D A M   N E W S
Advertisement

உலகம்

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.

காஸாவின் குழந்தைகள் கூட எதிரிகள்தான் - இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தயாரான ஐஃபோன்களுக்கு 25% வரி – டிரம்ப் அரசின் அதிரடி முடிவு!

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்வர்ட்டிற்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை.. வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கத் தடை!

உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் அரசின் முடிவு சட்டவிரோதமானது என ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருடப்போன இடத்தில் விபரீதம்.. உடலை வெட்டி சமைத்த மாஸ்டர் செஃப்

பிரான்ஸில் 69 வயதான பீட்சா சமையல்காரர் திருட சென்ற இடத்தில், ஒருவரை கொலை செய்த நிலையில் அவரது உடல் பாகங்களை வெட்டி சமைத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Heart lamp: புக்கர் பரிசை வென்ற 2-வது கன்னட எழுத்தாளர்.. குவியும் பாராட்டு

நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.

இலங்கை போர் நினைவுநாள்: தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிபரின் அறிவிப்பு

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இறுதிகட்ட போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - மாலத்தீவு இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஜோ பைடனுக்கு புற்றுநோய் உறுதி .. வெளியான மருத்துவ அறிக்கை!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது சமீபத்திய மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது வழக்கமான உடல் பரிசோதனையின் போது, அவரது உடலில் கண்டறியப்பட்ட ஒரு கட்டியை சோதனை செய்தபோது, இது புரோஸ்டேட் புற்றுநோய் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் 267 தலைவராக 14ஆம் லியோ பதவியேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.