K U M U D A M   N E W S

தமிழ்நாடு

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது!

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

அயனாவரத்தில் அதிர்ச்சி: ரூ.500 தகராறில் நண்பரைக் கட்டையால் அடித்துக் கொலை.. ஒருவர் கைது!

₹500 கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நண்பரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய் பொடி தூவி ரூ.50,000 திருட்டு!

ராசிபுரத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பெண், ஓய்வுபெற்ற செவிலியரிடம் மிளகாய் பொடி தூவி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்'- கமல்ஹாசன் சொன்ன பதில்!

தெரு நாய்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "எல்லா உயிரினங்களையும் முடிந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

காவல்துறையினர் மீது தாக்குதல்: 29 வடமாநில தொழிலாளர்கள் சிறையில் அடைப்பு!

திருவள்ளூர் அருகே காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ₹65 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: 3 பேர் கைது!

ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹனி டிராப் கும்பல் சிக்கியது: தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது!

சென்னையில் தொழிலதிபர் ஒருவரை 'ஹனி டிராப்' (honey trap) செய்து கடத்தி பணம் பறித்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.