K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சட்டசபைக்கு கூட வர முடியாது – தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

நடிகர் ரஜினிகாந்துக்கு நான் போன் செய்து பேசி விட்டேன்.ரொம்ப தேங்க்ஸ் சார், இப்போது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று அவரிடம் கூறினேன் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசில் பாஜகவினர் புகார்

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கமலாலயத்திற்கு வந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய துணைக்கண்டத்தில் மக்களுக்கு சேவையாற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறந்த திட்டம் ஏதாவது மாநிலத்தில் உள்ளதா என அரசை குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டங்கள் நேரிடையாக பொதுமக்களின் இல்லங்களில்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்

அலட்சியத்தில் சுகாதாரத் துறை.. நிபா வைரஸ் பரவும் அபாயம்.. அச்சத்தில் கோவை மக்கள்!

கேரள மாநிலம், பாலக்காடு மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு உள்ளதால், கேரள மாநிலம் முழுவதும் உஷார்ப்படுத்தப்பட்டு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்

ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.

திருவண்ணாமலையில் பாலத்தில் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி…3 பேர் படுகாயம்

பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இபிஎஸ் கேவலமான அரசியலை செய்து வருகிறார்- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

தேர்தல் பரப்புரையில் நான் பேசியதை தவறாக சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மக்களே ரெடியா இருங்க.. வெளுத்து வாங்கப்போகும் மழை..!

வட தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல்…இளைஞர் கைது

சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.