K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் அலறல்.. ரோப் கார் பழுதால் பூங்காவில் பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்.. புதூர் அப்புவின் பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trichy Flight: நெஞ்சை பதற வைத்த திருச்சி விமானம் சம்பவம்... லேண்டிங் பிரச்சினைக்கு இதுதான் காரணமா?

நேற்று (அக்.11) மாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இந்த பரபரப்புக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் விபத்துக்கு காரணம் யார்? 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அட்மிஷனுக்கு குவிந்த பெற்றோர்கள்.. அரசின் அறிவிப்பால் திணறிய பள்ளிகள்!

விஜயதசமி பண்டிகையை ஒட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்....

நாளை (அக். 13) உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தகாத உறவால் வந்த வினை... கைது செய்யப்பட்ட 7 பேர்| Kumudam News 24x7

தகாத உறவால் கண்டித்தவர்களை சுட்டுக் கொல்லத் திட்டம்

மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்கதையாகும் ரயில் விபத்துகள்.... மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

ரயில் விபத்துகள் தொடர்கதையாவதை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இரவில் பயங்கர ரயில் விபத்து... தமிழ்நாட்டை உலுக்கிய அலறல் சத்தம்!

சென்னை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இரண்டரை மணி நேரம் திக்.. திக்.. என்ன நடந்தது ஏர் இந்தியா விமானத்தில்?

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

கண்ணீர் வெள்ளத்தில் கோபாலபுரம்... முரசொலி செல்வத்தின் உடல் தகனம்

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே டிரைவிங்... ஓட்டுநருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்... தமிழக அரசு அதிரடி!

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக, போக்குவரத்துத் துறை அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் கனமழை.... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.11) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போலியான அரசாணை... கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியரை தட்டித் தூக்கிய போலீஸ்!

காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை... குழப்பத்தில் நகை பிரியர்கள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 56,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Rain Update: அதிகனமழை எச்சரிக்கை... சம்பவம் இருக்கு... மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்ற அவசர உத்தரவு

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முரசொலி செல்வம் மறைவு.. கோபாலபுரத்தின் தீபம் அணைந்தது.. வைகோ கண்ணீர்!

முரசொலியின் புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்கலங்கி பேசினார்.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி... இதுவரை ரூ. 1116 கோடி இழந்த பொதுமக்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: நேரில் ஆஜராகி ஆதரவு தெரிவித்த சீமான்…!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். 

‘பவன் கல்யாண் பேச்சால் பதற்றம்’.. வழக்குப்பதிவு செய்யகோரி ஆணையரிடம் புகார்

உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கோவிலில் குழந்தையிடம் நகை பறிப்பு.. பக்தியில் திளைத்த மர்ம பெண்ணால் பரபரப்பு

குழந்தையை தூக்கிச் சென்று கையில் இருந்த மோதிரம், கை செயினை கழற்றிக்கொண்டு, பக்தியுடன் கோவிலை சுற்றி வந்த மர்ம பெண்ணால் பரபரப்பை ஏற்பட்டது.

தொழிலாளர்களை வழிமறித்து கைது.. 625 பேர் வழக்குப்பதிவு.. சாம்சங் போராட்டத்தில் போலீஸார் அடாவடி

சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.