பெங்களூரில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
கனமழை
கர்நாடக மாநிலம், பெங்களூரில் காலை முதல் மிதமான வெயில் இருந்து வந்தது. மதியம் முதல் வானம் சற்று மேகமூட்டத்துடன் சில்லேன்ற காற்றுடன் வானிலை மாறியது. இதைத்தொடர்ந்து மாலையில் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும், பெங்களூரு விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமான நிலையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டது.அதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தரையிறங்குவதற்காக அனுமதி பெறப்பட்டு பயணிகள் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
வானத்தில் வட்டமடித்த விமானங்கள்
குறிப்பாக சிலிகுரியில் இருந்து பெங்களூர் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், துர்காபூர் விமான நிலையத்திலிருந்து பெங்களூர் சென்ற தனியார் பயணிகள் விமானம், அயோத்தியில் இருந்து பெங்களூர் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் இருந்து பெங்களூர் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் என ஐந்து விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வட்டமடித்து கொண்டிருந்தது.
Read more: IPL 2025: தொடக்க ஆட்டத்தில் RCB அணியை எதிர்கொள்ளும் KKR.. எங்கு, எப்படி பார்க்கலாம்..!
அதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தரையிறங்குவதற்கு அனுமதி கேட்டனர். அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமடித்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.பயணிகள் விமானத்திலேயே தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் எனவும் பெங்களூரு விமான நிலையத்தில் வானிலை சரியான பிறகு திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு திரும்பிய விமானங்கள்
தொடர்ந்து பெங்களூரில் தரையரங்க வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறங்கி வருவதால் வழக்கமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தாமதமாக இறங்கி வருகிறது.இரவு 9 மணி வரை மழை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், சூறைக்காற்றின் வேகத்தை பொறுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு விமானங்கள் புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள
What's Your Reaction?






