லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறிய ரக விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. இதையடுத்து, விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரேனும் காயமடைந்தார்களா அல்லது இறந்தார்களா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த விமானம் நெதர்லாந்தை தளமாகக் கொண்ட சியூஷ் ஏவியேஷன் (Zeusch Aviation) நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இந்த விமானம் முன்னதாக கிரேக்கத்தின் ஏதென்ஸில் இருந்து குரோஷியாவின் புலாவுக்கும், பின்னர் சவுத்தெண்டிற்கும் பறந்து வந்துள்ளது. நேற்று மாலை நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட்க்கு மீண்டும் பறக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சியூஷ் ஏவியேஷன் நிறுவனம் தனது SUZ1 விமானம் இந்த விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உதவுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் 12 மீட்டர் நீளமுள்ள, நோயாளிகளைக் கொண்டு செல்லும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பீச்ச்கிராஃப்ட் பி200 சூப்பர் கிங் ஏர் (Beechcraft B200 Super King Air) ரக டர்போப்ரோப் விமானம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜான் ஜான்சன் என்ற நபர் கூறியதாவது, “விமானம் தரையில் மோதிய பிறகு ஒரு "பெரிய தீப்பிழம்பு"ஏற்பட்டது. விமானம் புறப்பட்டு சுமார் மூன்று அல்லது நான்கு வினாடிகளுக்குப் பிறகு, இடதுபுறமாக வேகமாகத் திரும்பத் தொடங்கியது. பின்னர் அது கவிழ்ந்து தரையில் மோதியது," என்று அவர் தெரிவித்தார்.
இந்த விமானம் நெதர்லாந்தை தளமாகக் கொண்ட சியூஷ் ஏவியேஷன் (Zeusch Aviation) நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இந்த விமானம் முன்னதாக கிரேக்கத்தின் ஏதென்ஸில் இருந்து குரோஷியாவின் புலாவுக்கும், பின்னர் சவுத்தெண்டிற்கும் பறந்து வந்துள்ளது. நேற்று மாலை நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட்க்கு மீண்டும் பறக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சியூஷ் ஏவியேஷன் நிறுவனம் தனது SUZ1 விமானம் இந்த விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உதவுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் 12 மீட்டர் நீளமுள்ள, நோயாளிகளைக் கொண்டு செல்லும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பீச்ச்கிராஃப்ட் பி200 சூப்பர் கிங் ஏர் (Beechcraft B200 Super King Air) ரக டர்போப்ரோப் விமானம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜான் ஜான்சன் என்ற நபர் கூறியதாவது, “விமானம் தரையில் மோதிய பிறகு ஒரு "பெரிய தீப்பிழம்பு"ஏற்பட்டது. விமானம் புறப்பட்டு சுமார் மூன்று அல்லது நான்கு வினாடிகளுக்குப் பிறகு, இடதுபுறமாக வேகமாகத் திரும்பத் தொடங்கியது. பின்னர் அது கவிழ்ந்து தரையில் மோதியது," என்று அவர் தெரிவித்தார்.
Beech B200 Super King Air passenger plane crashes at London Southend Airport in Essex at around 4pm on Sunday afternoon.
— Paul A. Szypula 🇺🇸 (@Bubblebathgirl) July 13, 2025
It was headed to the Netherlands. The jet can carry 13 passengers and two crew.
Ambulance crews and Essex Police are at the scene.https://t.co/jX1cYYBfKn